‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரை களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டுமக்களுடன் மாதம்தோறும் உரையாடி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு "மனதின் குரல்' என பெயரிடப்பட்டுள்ளது.

 அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வானொலி நிகழ்ச்சியின் மூலம் உரையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

 இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ளன. ஆகையால், இந்த வானொலி நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு, தேர்தல் ஆணையத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விண்ணப் பித்திருந்தது. இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் உரையாற்ற அனுமதியளித்தது. சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநில மக்களிடையே எவ்வித பாதிப்பையோ, தலையீட்டையோ ஏற்படுத்தா வகையில் வானொலியில் உரையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...