திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டி

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டுகளே  மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சிநடத்தும் பாஜக இதுவரை கேரள சட்ட சபைக்குள் நுழைந்ததே இல்லை.

இதனால் இந்த சட்ட சபை தேர்தலில் கேரளாவில் எப்படியாவது கணிசமான இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்தி மோடியும், பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். இதற்காக அமித்ஷா அடிக்கடி கேரளாவந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு செல்கிறார்.

அவரது ஆலோசனைப்படி கேரளாவில் உள்ள பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டனர். அவர்களை தேர்தலில் களமிற க்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நடிகர்கள் சுரேஷ் கோபி, பீமன் ரகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரையும் தேர்தலில்நிறுத்தி வெற்றி பெற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சுரேஷ் கோபி தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். ஸ்ரீசாந்த் பாரதீய ஜனதா நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றார். இதைத் தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவில் இணைந்தார். முதற்கட்டமாக கேரளாவில் போட்டியிடும் 51 தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதில் திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் பீமன் ரகு, பத்தனாபுரம் தொகுதியிலும், சினிமா டைரக்டர் அலி அக்பர் கொடுவள்ளி தொகுதியிலும், டைரக்டர் ராஜசேனன் நெடுமங்காடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நடிகர் சுரேஷ்கோபியை திருவனந்தபுரம் தொகுதியிலும், ஸ்ரீ சாந்த்தை திருப்பூணித் துறை தொகுதியிலும் களமிறக்கலாம் என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதேசமயம் திருப்பூணித்துறை தொகுதியில் பிரபல பேராசிரியர் துறவூர் விஷ்வம்பரன் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட முடிவு செய்து அங்கு வேலைகளையும் தொடங்கி விட்டார். இதனால் திருப்பூணித்துறையில் ஸ்ரீசாந்த்தை களமிறக்க அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சுரேஷ்கோபியும் போட்டியிட மறுத்துவிட்டதால் அவருக்கென ஒதுக்கப்பட்டு இருந்த திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

கேரளாவில் பாஜக, ஈழவ சமுதாய சங்கத்தை சேர்ந்த வெள்ளாப் பள்ளி நடேசன் தலைமையிலான பி.டி.ஜே.எஸ். கட்சியில் கூட்டணி அமைத்துள்ளது. அந்தகட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள 111 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. நேற்று முதற்கட்டமாக 51 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். 2–ம் கட்டவேட்பாளர் பட்டியலில் மாநில நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறும் என தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...