யாருமே தொடர்பு கொள்ள முடியாத ஒருவர்தான் தமிழகத்தை ஆள்கிறார்

பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றமே முன்னேற்றம் தரும் என்ற கோஷத்தோடு மக்களை பா.ஜனதா சந்திக்கபோகிறது. முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். 2 விஷயங்களை நீங்கள் மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த சந்திப்பு.

முதலாவது, யாருமே பார்க்கமுடியாத- தொடர்பு கொள்ள முடியாத முதல்-அமைச்சர் ஒருவர்தான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார் என்று மத்திய மின்துறை மந்திரியே குற்றம்சாட்டி இருக்கிறார். இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஏனென்றால், இதனால் தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்கள், நலத்திட்டங்கள் என்று எதுவுமே கிடைக்காமல் போய்விட்டது. ஜெயலலிதாவால் தமிழக அரசின் நிர்வாகம் அபாயநிலையில் உள்ளது.

இந்த அபாயநிலையில் இருந்து தமிழகத்தை மீட்க, பா.ஜ.க.,வால் மட்டுமே முடியும். புதிதாக இந்ததேர்தலில் 1 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும், பா.ஜ.க.,விற்கு தான் ஆதரவாக உள்ளனர்.

இரண்டாவது விஷயம், தீவிரவாதிகளிடம் அதிமுக. அரசு மென்மையான போக்கினை கடைபிடிக்கிறது. இப்படி நான் கூறுவதால், முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று சொல்லிவிட வேண்டாம்.

இந்த தீவிரவாதிகளால் முஸ்லிம்களுக்கே பாதிப்புதான் ஏற்படுகிறது. இந்த தீவிரவாதிகளால், பா.ஜனதா மற்றும் இந்துமுன்னணி தவிர பொதுமக்கள், போலீசாரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நாங்கள்சொல்லும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தேர்தலுக்காக சொல்லவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. அரசு ஊழல்கறை படிந்தது என்பதனை சொல்லி வருகிறோம். எங்கள் கட்சி தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் பங்கேற்ற முதல் பொது கூட்டத்திலேயே, தமிழகம் ஊழல்பிடியில் சிக்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.