உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை முதல்வர் சிவராஜசிங் செளஹான் திறந்துவைத்தார்

மத்தியப்பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டத்தில் உள்ள முகுந்த் பூரில், உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் சிவராஜசிங் செளஹான் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

சுமார் 50 கோடி பொருள்செலவிலும், 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் தொடக்கவிழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய எஃகு மற்றும் சுரங்க துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், முதல்வர் சிவராஜ்சிங் செளஹான், மாநில மின்துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா ஆகியோர் கலந்துகொண்டு, சரணாலயத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்தவிழாவில், சுமார் ஒருலட்சம் பேர் கலந்து கொண்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் விந்திய பகுதியில்தான், கடந்த 1915ம் ஆண்டுமுதல் வெள்ளைப் புலி கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, அந்தசரணாலயத்தில் ரகு என்ற ஆண் வெள்ளை புலியும், விந்தியா, ராதா என்ற இரண்டு வெள்ளைப் புலிகளும் உள்ளன. மேலும், இரண்டு ராயல் வங்காளப் புலிகளும் இங்கு உள்ளன. இன்னும் சில மாதங்களுக்குள், வெள்ளைப் புலிகளின் எண்ணிக்கை 9-ஆக உயர்த்தப்படும் என்று மாநில அமைச்சர் சுக்லா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...