ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை இந்ததேர்தலில் பிஜேபி மாற்றிக்காட்டும்

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை இந்ததேர்தலில் பிஜேபி மாற்றிக்காட்டும் என  இக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
.

அசாம் மாநிலத்தில் தேர்தல்பிரசாரம் செய்து வரும் அமித் ஷா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-தேசியத்தை காப்பதில் பிஜேபி எடுத்துள்ள நிலையை நாடுதழுவிய அளவில் ஒவ்வொருவரும் ஆதரிக்கிறார்கள். தேசியத்தை விவாதத்துக்க உள்ளாக்கு பவர்கள் இதை விரைவில் உணருவார்கள்.


நாங்கள் ராஷ்ட்ரா பற்றி கூறுகிறோம். இந்தகருத்தை விளக்குவதற்கு ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. ஒட்டு மொத்த கலாச்சாரம் பற்றி நாங்கள் பேசுகிறோம். இதைவிளக்குவதற்கும் ஆங்கிலசொல் அகராதியில் வார்த்தை இல்லை. அதனால்தான் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் மத சார்பின்மையை குறிப்பிடலாம். இதற்கு சர்வ தர்மா, சம்பகாவ் போன்றவற்றை அர்த்தமாக கொள்ளலாம். ஆனால் சிலர் வேறுவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள்.


சட்ட  விரோதமான குடியேற்றத்தை தவிர்ப்பதற்காக இந்தியாவங்கதேச எல்லையை மூட வலியுறுத்தி தொலை நோக்கு திட்டத்தை வெளியிட்டு இருக்கிறோம். அசாம் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்  என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.

அசாம்தவிர பிற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பிஜேபியின் செயல்பாடு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில்கூட தற்போதைய ஆட்சியை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.


 எல்லா மாநிலத்திலும் ஊழலை ஒழிக்கவே பிஜேபி பாடுபடுகிறது. பிஜேபி என்பது இந்திபேசும் மாநிலங்களில் உள்ளகட்சி என்பதை மாற்றி காட்டுவோம். கேளா, தமிழ்நாட்டில் இந்த தடவை  ஒரேகட்சிக்கு வாக்களிக்கும் பாரம்பரிய வாக்காளர்களை மாற்றி காட்டுவோம். தேர்தல்முடிவு வரும்போது நீங்கள் இதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...