ஆசியாவிலேயே 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம்; கலக்கும் மோடி

குஜராத்தில் நடக்கும் “துடிப்பான குஜராத் மாநாடு” நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, தமிழ் நாட்டு தொழிலதிபர்களை அழைக்க சென்னை வந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,

சென்னை தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதாவது ;

வர்த்தக முறை இன்று முற்றிலுமாக மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றுதான் செய்யனும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு இடத்தில் இருந்தப்படியே உங்கள் தொழில்-ஒப்பந்தங்களை மேற்க் கொள்ளலாம். அதற்கு குஜராத் முழு அளவில் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது.முதல் செயலாக அரசு நிர்வாகத்தின் அனைத்து மரபுகளையு உடை தெறிந்தோம். பொறு பற்றத்தன்மை, இழுத்தடிப்பு, லஞ்சம், சோம்பல் என்று , அரசு-நிர்வாகத்தின் அவலட்சணமாக கருதப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம். இன்று ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தங்கு தடையற்ற தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே .

குஜராத் முழுவதும், 2,200 கி-மீட்டருக்கு எரிவாயு குழாய் இணைப்பு வழங்க பட்டுள்ளது. தண்ணீர் பற்றா குறை கிடையாது.ஒவ்வொரு குக்-கிராமத்திலும், பிராட் பேண்ட் இணைய வசதி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் , ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 -ம் தேதி, மாநிலத்தில் இருக்கும் , 1.5 கோடி மாணவர்களுடனும் , தலை-நகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த 7 ஆண்டுகளாக, குஜராத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே இருக்கிறது .

விவசாயத்தில் 9.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்றுமடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில்தகராறு இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 %வளர்ச்சி கண்டு உள்ளது . இதோடு ஓய்வது-தில்லை; இன்னும் நிறையத்தூரம் செல்லவேண்டும் என்பதுதான் எங்கள் தீர்மானம்.

மாநிலத்தினுடைய மொத்த வருவாயில் 30% விவசாயம்,30% தொழிற்சாலைகள், 30% சேவை துறைகள் என்பதுதான் எங்கள் சமன்பாடு. அப்போழுது தான், வளர்ச்சி பாதையில் இருந்து எந்த பகுதியும் விடுபடாமல் இருக்கும்

நான் முதல் முறை முதல்வராக பொறு பேற்றபோது, மாநிலம் மின்சார பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது.. நிதி பற்றா குறையும் இருந்தது. இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம் இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...