மம்தா பானர்ஜியின் ஆட்சி இருண்டகாலம்

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி இருண்டகாலம் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் தற்போது சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டமாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் 3 கட்டதேர்தல்கள் ஏற்கனவே முடிந்துவிட்டன. 4 வது கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி நடக்க இருக்கிறது. வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பொதுகூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது மம்தா ஆட்சியை கடுமையாக விமா்சித்தார்.

மம்தாவின் ஆட்சி கடந்த இடது சாரிகள் ஆட்சியையை காட்டிலும் இருண்ட காலமாக இருக்கிறது என்றார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு மம்தா ஆட்சிக்கு வந்தபோது மேற்கு வங்கத்துக்கு விடிவுகாலம் ஏற்பட்டிருப்பதாக அனைவரும் எதிர்பார்த்தனர். 34 ஆண்டுகால இடதுசாரிகளின் இருண்ட ஆட்சி விரட்டி அடிக்கப் பட்டதாக நம்பினர். ஆனால் வெளிச்சம் வருவதற்கு பதிலாக கடுமையான இருள் மேற்குவங்கத்தை இப்போது சூழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியவர் மம்தா. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மாறிவிட்டார். விவேகானந்தா மேம்பாலம், சாரதா ஊழல், நாரதா டேப் என அவரது ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...