தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும், பா.ஜ.க. வென்றால் காவிரி பிரச்சினையை தீர்ப்போம்

கர்நாடக மாநில முன்னாள் உயர் கல்வித்துறை மந்திரியும், தமிழக பாஜக. தேர்தல் இணை பொறுப்பாளருமான சி.டி. ரவி எம்எல்ஏ. ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 30 ஆண்டுகளாக திறக்கப் படாமல் இருந்த திருவள்ளுவர் சிலை தொடர்பான பிரச்சினையை பாஜக. தீர்த்துவைத்து, சிலையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள காவிரி உள்ளிட்ட அனைத்து தேசியநதிகளையும் இணைப்பதற்கு உண்டான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்திலும், பா.ஜ.க. வெற்றிபெற்றால், காவிரி தென்பெண்ணை நதி பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

வருகிற மே மாதம் 6–ந்தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி, ஓசூர் வருகிறார். இங்கு போட்டியிடும் பாஜக. வேட்பாளருக்கு ஆதரவாக தனது முதற்கட்டபிரசாரத்தை தொடங்க உள்ளார்.

தமிழகத்தில் திமுக., அதிமுக. கட்சிகளே மாறி, மாறி அதிகாரத்திற்கு வருகின்றன. அவர்கள் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் பல ஆயிரம்கோடி கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள் அதிமுக. மற்றும் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் இவ்வாறு சி.டி. ரவி நிருபர்களிடம் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...