தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும், பா.ஜ.க. வென்றால் காவிரி பிரச்சினையை தீர்ப்போம்

கர்நாடக மாநில முன்னாள் உயர் கல்வித்துறை மந்திரியும், தமிழக பாஜக. தேர்தல் இணை பொறுப்பாளருமான சி.டி. ரவி எம்எல்ஏ. ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 30 ஆண்டுகளாக திறக்கப் படாமல் இருந்த திருவள்ளுவர் சிலை தொடர்பான பிரச்சினையை பாஜக. தீர்த்துவைத்து, சிலையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள காவிரி உள்ளிட்ட அனைத்து தேசியநதிகளையும் இணைப்பதற்கு உண்டான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்திலும், பா.ஜ.க. வெற்றிபெற்றால், காவிரி தென்பெண்ணை நதி பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

வருகிற மே மாதம் 6–ந்தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி, ஓசூர் வருகிறார். இங்கு போட்டியிடும் பாஜக. வேட்பாளருக்கு ஆதரவாக தனது முதற்கட்டபிரசாரத்தை தொடங்க உள்ளார்.

தமிழகத்தில் திமுக., அதிமுக. கட்சிகளே மாறி, மாறி அதிகாரத்திற்கு வருகின்றன. அவர்கள் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் பல ஆயிரம்கோடி கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள் அதிமுக. மற்றும் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் இவ்வாறு சி.டி. ரவி நிருபர்களிடம் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...