விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என பிரிட்டனிடம் இந்தியா வலியுறுத் தியுள்ளது.


 ரூ.9,400 கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத விஜய்மல்லையா இப்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். தாம் இந்தியாவுக்கு வர இது சரியானநேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.


 இந்தியாவில் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு அவரது கடவுச்சீட்டை முடக்கியுள்ளது. மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅரசு கூறியுள்ளது.


 இந்நிலையில், தில்லியில் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இது தொடர்பாகக் கூறியதாவது:


 இந்தியாவில் கருப்புப்பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது தவிர வங்கி கடன்களைத் திருப்பி செலுத்தாத குற்றச் சாட்டும் அவர் மீது உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகவேண்டிய அவசியம் உள்ளது. எனவே, விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடமும் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் விகாஸ் ஸ்வரூப்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.