எதிர்பார்த்தவெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வாக்குவங்கி சதவீதம் குறையவில்லை

தமிழகத்தில் பாஜக.,வுக்கு எதிர்பார்த்தவெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அங்கு கட்சியின் வாக்குவங்கி சதவீதம் குறையவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருமிதப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்து தில்லியில் பாஜக தலைமை யகத்தில் செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:

 வடகிழக்கு மாநிலத்தில் பாஜக.,வுக்கு நல்லசெய்தி கிடைத்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் தகுதியை பாஜக பெறுகிறது. கடந்த மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக செயல் பாட்டில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அங்கு பாஜகவின் வாக்குவங்கி சதவீதம் 4.6 சதவீதத்தில் இருந்து 10.7 ஆக அதிகரித்துள்ளது.

 கேரளத்தில் வெற்றி பெற பாஜக கடுமையாக உழைத்தது. அதன்பலனாக அம்மாநிலத்திலும் பாஜக கூட்டணியின் வாக்குவங்கி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் எங்களுக்கு எதிர்பார்த்தவெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், எங்கள் கட்சியின் வாக்குவங்கி சதவீதம் குறையவில்லை என்பதை பெருமிதத்துடன் கூறமுடியும்.

 அஸ்ஸாம் மாநில மக்களின் நலன்களில் கவனம்செலுத்தும் வகையில், அங்கு ஆட்சி அமைக்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கேரளத்தில் நிலவி வந்த வன்முறை அரசியலை எதிர்கொண்டு இத்தேர்தலை  பாஜக சந்தித்தது.

 மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக பாஜகவின் வாக்குவங்கி உள்ளது. கேரளம், புதுச்சேரி, தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை வலுப்படுத்தி  2019-இல் வரும் மக்களவை தேர்தலில் இந்தமாநிலங்களில் மிகச்சிறந்த முறையில் செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன் என்றார் அமித் ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...