கர்நாடகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பேன்

கர்நாடகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்று பா.ஜ.க வேட்பாளரான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லி மேல்சபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று வேட்புமனு தாக்கல்செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கன்னடமொழியை கற்க முயற்சிசெய்வேன். ஏற்கனவே இந்தமுயற்சியை தொடங்கிவிட்டேன். மாநிலத்தின் நிலம், நீர், மொழி, எல்லை பிரச்சினைகளில் கர்நாடகத்தின் நலனுக்காக குரல்கொடுப்பேன். கர்நாடக மக்களுக்கு சேவையாற்றுவேன். பிரதமர் மோடி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை கர்நாடகத்திற்கு அனுப்பியுள்ளார்.

கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்புகிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி செய்தபோது எடியூரப்பா ஏராளமான திட்டங்களை அமல் படுத்தினார். விவசாயிகளுக்கு தனியாக விவசாய பட்ஜெட்டை அவர் தாக்கல்செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், பாக்ய லட்சுமி திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களை எடியூரப்பா அமல்படுத்தினார்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கர்நாடக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அவர் கர்நாடகத்திற்கு எந்தசேவையும் ஆற்றவில்லை என்று குறை கூறி டிக்கெட் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. வேறுசில காரணங்களால் கட்சி என்னை கர்நாடகத்தில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளது இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.