, தலித்வீட்டில், ஒரு வேளையாவது, உணவை சாப்பிடுவது என்பதை, சபதமாக எடுத்திருக்கிறேன்

கட்சியின் தலைவர் அமித்ஷாவின் எண்ணப்படி, வருடத்தின் அனைத்து நாட்களிலும், தலித்வீட்டில், ஒரு வேளையாவது, உணவை சாப்பிடுவது என்பதை, சபதமாக எடுத்திருக்கிறேன்,'' என, தமிழக பாஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.


கடந்த சில நாட்களுக்கு முன், உத்தர பிரதேசம், அலகாபாத்தில் பா.ஜ., தேசியசெயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலத்தலைவர்கள், தலித் இன மக்களை நோக்கி கட்சியை கொண்டுசெல்ல வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.


அதற்காக, தலித்வீடுகளுக்கு சென்று, சாப்பிடவேண்டும்; மாநில – மாவட்ட நிர்வாகிகள், கட்சிப்பணி தொடர்பாக, சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, தலித் வீடுகளுக்கு சென்று, மத்திய அரசின் தலித்ஆதரவு செயல்பாடுகளை கூறி, அவர்கள் வீடுகளில் சாப்பிடவேண்டும் என, கூறினார்.


இதையடுத்து, கூட்டத்தை முடித்து, தமிழகம் திரும்பிய தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை, எழும்பூரில் உள்ள திடீர் நகர் பகுதிக்கு சென்றார்.

அங்கு, விவேகானந்தன் என்ற தலித்வீட்டுக்கு சென்று, அந்த பகுதி மக்களோடு, சிலமணி நேரம் இருந்தார். பின், அவர்கள் வீட்டிலேயே மதிய உணவு அருந்தினார். அடுத்தநாள், சேலம் சென்ற அவர், அங்குள்ள காக்காயன் சுடுகாடு அருகில் உள்ள கோர்ட் ரோடு காலனிக்கு சென்றார். அங்குள்ள கட்சிக் காரர் ஜீவானந்தம் வீட்டுக்கு சென்றார். தலித் இனத்தை சேர்ந்தவரான, அவர் வீட்டில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்.

சுற்றிலும் உள்ள மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவர்களிடம் மோடி அரசின் தலித் ஆதரவுகொள்கைகள் மற்றும் திட்டங்களை எடுத்துக்கூறி, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின், ஜீவானந்தம் வீட்டில் சாப்பாடுகேட்க, அவர்கள், சாப்பாடு இல்லாமல் தவித்துள்ளனர். வீட்டிலேயே சாப்பாட்டை செய்யச்சொல்லி, அதை சாப்பிட்டுவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார்.


இதுகுறித்து, தமிழிசை சவந்தர ராஜன் கூறுகையில், ''பா.ஜ.க,வுக்கும் தலித்களுக்கும் துாரம் என்பதை மாற்ற இந்தமுயற்சி. தலித்மக்கள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும் என்ற, தலைவர் அமித்ஷாவின் எண்ணம் நிறைவேற்றப் படுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களிலும், ஒருவேளையாவது, தலித் ஒருவர் வீட்டில் உணவருந்துவது என, சபதம் எடுத்துள்ளேன்; நிறைவேற்றுவேன்,'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...