முதலில்தேசம், இரண்டாவதே கட்சி, அதன் பின்தான் கட்சித் தலைவர்கள்

பாஜக., முதலில் தேசத்தையும், அடுத்த இடத்தில் கட்சியினையும், மூன்றாவது இடத்தில் தலைவர் களையும் வைத்து கட்சி நடத்துகிறது. இது மற்றகட்சிகளில் இருந்து மாறுபட்ட கட்சி என, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பாஜக.,ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்ககூட்டம் தனியார் திருமணமகாலில் நடந்தது. மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை வகித்தார். மாவட்டதலைவர் பாலாஜி வரவேற்றார். மாநில பொது செயலாளர் எஸ்.ஆர்.சரவணப்பெருமாள், கோட்டபொறுப்பாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசியசெயலாளர் தருண் சிங் பேசியதாவது: 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., அரசு சோனியா காந்தியின் ரிமோட்டால் இயங்கிய மன் மோகன்சிங் பிரதமராக இருந்தார். இந்த ஆட்சியில் ஊழலும், 2 ஜி ஸ்பெக்டரம், காமன்வெல்த் ஆகிய பல்வேறு ஊழல்களை செய்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், சாமானியமக்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். முக்கிய திட்டங்களாஜ விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு திட்டம், 21 கோடி போர் கணக்கு துவக்கியுள்ளனர். 38 ஆயிரம்கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். முத்ரா வங்கி கடன் போன்ற பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. காஸ்மானிய திட்டத்தில் ஒருகோடி பேரின் மானியத்தை பிரதமர் வேண்டுகோளின் படி விட்டுக் கொடுத்தனர். அந்த பணத்தில் 5 கோடி ஏழைகளுக்கு இலவச காஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என அவர் பேசினார்.

சுரங்கம் மற்றும் இரும்பு எக்குத்துறை இணையமைச்சர் விஷ்ணுதியோ சாய் பேசியதாவது:

இன்று உலகில் உள்ள கட்சிகளில் 10 கோடி உறுப்பினர்களை கொண்டகட்சியாக பாஜக., உள்ளது. இந்தியா ஊழல்மிகுந்த நாடு என்ற பெயரை பெற்றிருந்தது. நரேந்திர மோடி உலக நாடுகளுக்குசென்று இந்தியாவிற்கு தனி மரியாதையையும், அந்தஸ்தையும் பெற்றுவருகிறார். அவரது தாரக மந்திரம் ""எல்லோரும் சேர்த்து, எல்லோருக்கும் வளர்ச்சி'' ""நானும் சாப்பிடமாட்டேன், அடுத்தவர்களையும் சாப்பிட விடமாட்டேன் என்ற நிலையில் இருந்து வருகிறார் மோடி. நிலக்கரி சுரங்கம் போன்றவைகளில் பெறப்படும் வருமானம் அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக வழங்கப் பட்டு வருகிறது. பொதுமக்களின் கருத்து கேட்டுத்தான் வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதற்கேற்பட பட்ஜெட்போடப்பட்டு வருகிறது என, அவர் பேசினார்.

மத்திய திறன் மேபாட்டுத்துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி பேசியதாவது: தற்போது

நடந்த தமிழக தேர்தலில் பா.ஜ.க., கட்சி தோற்றுப் போனதால், தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளோம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். உங்கள் பின்னால் இந்தியாவில் 2000 பாஜக., எம்.எல்.ஏ.,க்கள் 325 எம்பி.,க்கள், 15 முதல் அமைச்சர்கள் உள்ளனர். பாஜக.,கட்சி வித்தியாசமான மாறுபட்டகட்சியாகும். முதலில்தேசம், இரண்டாவது கட்சி, அதன் பின் தான் கட்சித் தலைவர்கள். மற்ற கட்சிகளில் முதலில் கட்சித் தலைவர், அடுத்த படியாக கட்சி, அதன் பின்தான் தேசத்தை பற்றி நினைக்கின்றனர்.

1980 ல் பாஜக., துவக்கப்பட்டது. 1984 ல் இரண்டு எம்.பி.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றோம். 2014 ல் 284 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று தனிப் பெருமான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளோம். அசாம் மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம் இன்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளோம். கேரளாவில் ஒரு எம்.எல்.ஏ., வெற்றிபெற்றுள்ளார். அடுத்த தேர்தலில் அங்கு பா.ஜ.க., ஆட்சி அமைக்கும். அதே போல் தமிழ் நாட்டில் விரைவில் பா.ஜ.க., ஆட்சியினை அமைக்கும், என அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.