வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: சுய உதவி குழுக்களுக்கும், அவர்களது சுய வேலை வாய்ப்புக்கும் போதிய நிதி ஒதுக்கவேண்டும். மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் மேலும் கடன்வழங்க வேண்டும். வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கியநோக்கம். ஏழைகளுக்கு மீன் வழங்குவதை காட்டிலும், அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும்.
எந்தவொரு விவகாரங்களையும் காஷ்மீருடன் இணைத்து பாக்., பேசிவருகிறது. பாக்.,கின் அர்த்தமற்ற இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீரை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.