கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம்

கல்வியில் புதுமையில்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்விகேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்கவைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த பஜார் பத்திரிகை குழு ஏற்பாடுசெய்த ‘இன்ஃபோகாம் 2016’ நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர் கூறியதாவது:

சாராம்சமாக, கிளர்ச்சியின் விளைவே புதுமை. ஏற்கெனவே இருக்கும் நடைமு றைகளைக் கொள்கைகளை தக்கவைப்பதற்கு எதிராக செயல்பட வில்லையெனில் அதனை எதிர்க்க வில்லையெனில் எந்த புதுமையையும் கொண்டுவர முடியாது. மோடி அரசு கல்வியில் புதுமைபுகுத்த கவனம் செலுத்திவருகிறது.

இந்தியக் கல்வித் துறையில் புதுமை இல்லாததற்கு காரணம் என்ன? நாம் கேள்விகள்கேட்க அனுமதிக்கவில்லை. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுக்க விரும்ப வில்லை. பள்ளியில் மாணவர்கள் கேள்விகேட்டால் நாம் உட்கார் என்று தடைபோடுகிறோ. இது இப்படியே தொடர்வதுகூடாது. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். குழந்தைகள் கேள்விகேட்க வேண்டும்.

குழந்தைகளை கேள்விகேட்க அனுமதித்தால் புதுமை தானாகவே விளையும். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குட் படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும்.பிரதமர் நரேந்திரமோடியின் நீடித்த வளர்ச்சி இயற்கையை எதிர்மறையாக பாதிக்காது, மாறாக அனை வருக்கும் முன்னேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டது இதற்கு புதுமைபுகுவது அவசியம்.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டவளர்ச்சி ஊடகத்துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புதியகருத்துகளின் விளைவே மாற்றம். இதற்கு பலர் எதிர்ப்புதெரிவிக்கலாம், ஆனால் நேர்மறையாக சிந்திக்கவெண்டும் புதுமை குறித்து நம் பார்வைகளை கூர்மையாக்க வேண்டும் இவ்வாறு கூறினார் ஜவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...