தேசிய ஒருங்கிணைப்பை விளையாட்டு வளர்க்கும்

விளையாட்டு போட்டிகளை உயர்வடைய செய்யும் பட்சத்தில் தேசிய ஒருங்கிணைப் புக்கான பாதையில் நீண்ட தூரம் செல்ல உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று ரிலை யன்ஸ் அறக்கட்டளை இளைஞர் விளையாட்டு அமைப்பை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்து அவர் பேசும்போது, ‘‘இளைஞர்கள் வலுவான தனிநபர்களாக திகழ விளையாட்டுகளில் பங்கேற்கவேண்டும். விளையாட்டு நம் அன்றாட வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும். சிலர் விளையாட்டு என்பது உடல்நலனை பேணுவதற்காக மட்டுமே என்று நினைக்கின்றனர்.ஆனால் விளையாட்டு என்பது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

நாம் ஒரு பெரிய பன்முகப்பட்ட நாடாக உள்ளோம். தேசிய ஒருங்கிணைப்பை விளையாட்டு வளர்க்கும் விளையாட்டில் இருந்து நாம் உத்வேகத்தை கற்றுக்கொள்ளலாம். அது நமது சமூக வாழ்க்கைக்கு உந்து சக்தியாக செயல்படக்கூடியது.

விளையாட்டானது தோல்வியை எதிர்கொள்ளும் விதத்தை கற்றுக்கொள்ள உதவும். போராடும் குணத்தையும் பெற உதவியாக இருக்கும். தோல்வியால் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. திறமை, விடாமுயற்சி, நம்பிக்கை, பின்னடைவு மற்றும் சகிப்புதன்மை என்பதன் சுருக்கமே விளையாட்டு’’.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...