குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு

குஜராத் முதல்வராக விஜய்ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப்பொறுப்புகளில் இருந்து விலகி, அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டும் என்ற எழுதப்படாத விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத்முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து புதியமுதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம், காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பாஜக எம்ஏல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு அமித்ஷா, விஜய் ரூபானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

விஜய் ரூபானி, தற்போது வகித்துவரும் அமைச்சர் பதவியே தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் குஜராத் மாநில முதல்வராக விஜய்ரூபானி தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக நிதின் பட்டேல் தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ள விஜய் ரூபானி, 61, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்; 1956 ஆகஸ்ட், 2ல் பிறந்தார். பி.ஏ., – எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.மாணவராக இருக்கும் போதே அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.

1971ல் ஜன சங்கத்தில் சேர்ந்தார். ஜன சங்கம் தான், 1980ல் பா.ஜ.,வாக உருவெடுத்தது.அது முதல் பா.ஜ.,வில் இருந்துவரும் இவர், நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது சிறைசென்றார். 1987ல் ராஜ்கோட் நகராட்சி தலைவராகவும், 1996ல் ராஜ்கோட் நகரமேயராகவும் பதவி வகித்தார்; 2006ல் ராஜ்யசபா எம்.பி.,யானார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, இவர் அம்மாநில பா.ஜ., பொதுச்செயலராக பதவி வகித்தார்.

2014ல், குஜராத் சட்ட சபை சபாநாயகராக இருந்த வாஜூபாய் வாலா ராஜினாமா செய்ததால், ராஜ்கோட் மேற்கு சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.

ஆனந்திபென் அமைச்சரவையில், இவர் போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பதவி வகித்தார். ஆனந்திபென் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், புதியமுதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...