தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது

காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகுறித்து விவாதிக்க நாளை (12-ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங் களவையில் நேற்று தெரிவித்தார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹில்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து கடந்த 33 நாட் களாக நடந்துவரும் கல்வீச்சு போராட்டங்கள், வன்முறை காரணமாக இது வரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என நேற்று முன்தினம் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை அரசு ஏற்றுக் கொண்டது.நேற்று இதுதொடர்பான விவாதம் மாநிலங்களவை பூஜ்ஜியநேரத்தில் எடுத்து கொள்ளப்பட் டது. சுமார் 6 மணிநேரம் இது தொடர்பான விவாதம் நடந்தது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப்பேசிய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “காஷ்மீரை ராணுவத்தின் வசம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறையால் 4515 பாதுகாப்பு படையினரும், 3,356 குடிமக்களும் காயமடைந்துள்ளனர். காஷ்மீரில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தானால் தூண்டப் பட்டவை. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் அங்குள்ள மக்களை கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் தூண்டிவிட்டு வருகின்றனர்.

காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அடங்கியகுழு அனுப்பி வைக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி பங்கேற்பார். தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை இந்திய மண்ணில் அனுமதிக்க முடியாது. எந்தவொரு சக்தியாலும் காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்கமுடியாது” என்றார்.

இறுதியில், “காஷ்மீர் பள்ளத் தாக்கில் தொடர்ந்து நீடிக்கும் கொந்தளிப்பான நிலை, வன்முறை, ஊரடங்கு உத்தரவு ஆகியவை தொடர்பாக இந்த அவை மிகுந்த கவலை கொண்டுள்ளது” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...