இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இதில், 500 ஹெலிகாப்டர்கள், 12 நீர் மூழ்கி கப்பல்கள், 100 ஒருஎன்ஜின் கொண்ட போர்விமானங்கள், 120 இரண்டு இன்ஜின்கள் கொண்ட போர்விமானங்கள் உள்ளிட்டவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, பாதுகாப்பிற்கான ஆண்டு ஒதுக்கீடு 8 சதவீதம் அதிகரித்துவருகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும், பாதுகாப்புதுறைக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 5 முதல் 9 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் 8 சதவீதம் என கணக்கிடப் பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்காக ரூ.13 லட்சம்கோடி அடுத்த பத்தாண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ. 1.5 லட்சம்கோடி முதல் 2 லட்சம் கோடி வரை பற்றாக்குறை உள்ளது எனக்கூறினார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.