காளிதாசனின் புத்திக் கூர்மை

போஜராஜாவின் அரண்மனையில் இருந்த "காளிதாசன்", சிறந்த கவிஞன் மட்டுமல்ல சாதுர்யம் மிக்க பேச்சாற்றல் கொண்டவன். எதிர் அணியினர் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்டு மடக்கினாலும், தன் புத்திக் கூர்மையால் உடனுக்குடன் பதிலடி கொடுப்பவன்.

இப்பேர்ப்பட்ட காளிதாசன், ஒரு நாட்டிய மங்கையின் நடனம் மற்றும்

இசையில் மயங்கினான். அதைக் கேட்க, தினமும் அவள் வீட்டிற்குச் சென்றான்.

ஒரு நாள் காலை அவள் வீட்டின் வழியாகச் சென்ற போது, அவள் காளிதாசனைக் கூப்பிட்டு கடையிலிருந்து நல்ல இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்கும் படி வேண்டினாள். அவளைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காக, அவளிடமிருந்து பையை வாங்கிக் கொண்டு மார்க்கெட்டிற்குப் போனான்.

இறைச்சிக் கடைக்குப் போய் நல்ல இறைச்சியாகப் பார்த்து வாங்கி, அதை துண்டுகளாக்கி பையில் போட்டுக் கொண்டு நாட்டியக்காரியின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

எதிரில் ஒருவன் வந்தான். அவன் காளிதாசின் புகழைக் கேட்டு வயிறு எரிந்தவன். இறைச்சித் துண்டுகளால் ரத்தக் கறை படிந்த பையுடன் காளிதாஸ் வருவதைப் பார்த்து, "என்ன கவி அரசரே பையில் என்ன இருக்கிறது?" என குசும்புத்தனமாகக் கேட்டான்.

காளிதாசன், "பையில் ராமாயணம் இருக்கு" என்றான்.
எதிரில் வந்த புலவன், "பின் பை ஏன் நனைந்திருக்கு?" எனக் கேட்டான்.

காளிதாசன், "ராமாயணம் போன்ற நவரசம் நிறைந்த இதிகாச நூல் பையில் இருக்கும் போது அந்த நவசத்தினால் பை நனையாமல் எப்படி இருக்கும்?" என்று பதிலளித்தான்.

புலவன், "பின் பை ஏன் ரத்தக்கறை படிந்து இருக்கு?" என்றான்.
காளிதாசன், "ராமன் – ராவண யுத்தத்தில் மாண்ட ராட்ஷசர்களின் ரத்தக் கறைதான் அது" என்றான்.

புலவன், "அப்படியே வைத்துக் கொண்டாலும் சரி, ஆனால் நாற்றம் ஏன் வருகிறது?" என்று கேள்வி கேட்டான்.

காளிதாசன், "ராட்ஷசர்களின் அழுகிய பிரேதங்களிலிருந்து வரும் நாற்றம் அது" என்று பதிலளித்தான்.

இனிமேலும் குடைந்தால், தன் மானம் பறிபோகும் என்பதை உணர்ந்த புலவன், விட்டால் போதும் என்று தன் வழியே சென்றான்.

 

Tags; காளிதாசனின், புத்திக்  கூர்மை, காளிதாசன் , காளிதாஸ்,  காளிதாசர் , மகாகவி காளிதாசரின் , காளிதாஸ்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...