கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை

கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர்மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் பகுதியில் உள்ளது.


இந்நிலையில், சசி குமார் இருசக்கர வாகனத்தில் வியாழக் கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.


ரத்த வெள்ளத்தில் கீழேசரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


இத்தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார்மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


சசி குமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜை இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முற்றுகையிட்டு தக்கநடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர்.
கொல்லப்பட்ட சசி குமாருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். இவரது சகோதரர் சுதாகர் பாஜக இளைஞரணியின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.