உரி தாக்குதலுக்கு சரியானபதிலடி கொடுக்கப்படும்

ஜம்முகாஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் நீண்டகால போரை தொடுத்திருக்கிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாஜக தேசியக்கவுன்சில் கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றி அமித் ஷா பேசியதாவது:


உரிபகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியாக செயல் பட்ட சதிகாரர்களுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருப்பதை பாஜக உணர்கிறது. காஷ்மீர் எல்லைவழியாக இந்தியாவுக்குள் கடந்த 8 மாதங்களாக நடைபெற இருந்த 17 ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப்படையினர் முறியடித் துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே உரிபகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.


இதன் மூலம் இந்தியா மீது நீண்ட கால போரை பாகிஸ்தான் தொடுத்திருக்கிறது. எனினும், போரின்முடிவில் இந்தியாவே வெற்றிபெறும். பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பாஜகவும், மத்திய அரசும் ஆரம்பத்தி லிருந்தே கடைபிடித்து வருகிறது. உரிபகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சரியானபதிலடி கொடுக்கப்படும். கடந்த 8 மாதங்களில் 117 பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டை யிடுவதற்கான யுக்தியை மத்திய அரசு தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் ஆதரவைப்பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்கபதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என்று காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அமித் ஷா மறைமுகமாக பதிலடி கொடுத்தார். காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிவினைவாதிகள் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேசியக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...