அடுத்த ஆண்டுமுதல் ஜிஎஸ்டி அமல்படுத்துவது சாத்தியம்தான் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவைவரியை அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்படவேண்டிய வரி விகிதங்களை தீர்மானிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. 2 நாள் நடந்தகூட்டத்தில் இது தொடர்பான பிரச்னைகள் விரிவாக விவாதிக்கப் பட்டன.
இந்நிலையில் பொருளாதாரம் தொடர்பாக பாரத ஸ்டேட்வங்கி ஏற்பாடுசெய்த கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில்இருந்து சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடினமான இலக்கு என்றாலும், சாத்திய மானதுதான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
மாநில அரசுகள் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் இதிலுள்ள போட்டியின் முக்கியத் துவத்தை உணர்ந்திருக்கின்றனர். இறையாண்மையை நாம் பகிர்ந்துகொள்வதால் நமக்குள் கருத்தொற்றுமை அவசியம். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.