3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும்

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும் என்று  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பா.ஜனதா கட்சியின் மாநிலசெயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டுசெல்வதுடன் உள்ளாட்சி தேர்தலை பலம்பொருத்திய கட்சியாக எதிர்கொள்வது குறித்தும், காவிரிநீரை நியாயமான முறையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உறுதியாக பெற்றுதருவதற்கான அத்தனை முயற்சிகளையும் பா.ஜனதா மேற்கொள்ளும்.

காவிரி பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட தொழில் நுட்ப குழு சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி நிச்சயமாக தமிழக மக்களுக்கு நியாயம்கிடைக்கும் அளவுக்கு தீர்ப்பு இருக்கும். ஏனென்றால் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது மத்திய அரசு தான்.

சட்டத் திட்டங்களின்படி நடைமுறை நடந்து கொண்டிருக்கும் போது, ரெயில் மறியல் போராட்டம் என சில அரசியல் கட்சிகள் காவிரி பிரச்சினையை தங்கள் லாபத்துக்கு பயன் படுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சியைகூட காங்கிரசும், தி.மு.க.வும் எடுக்கவில்லை. இந்தபோராட்டத்தில் கலந்து கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்துவிட வில்லையென்றால் அது மிகவும் தவறான போக்காக அமையும். தமிழகத்துக்கு தண்ணீர்கிடைக்க வேண்டும் என்பது மாநில செயற்குழுவின் தீர்மானமாகும்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுகிறது. நடுநிலையாக தேர்தல்நடைபெற தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

கட்சியின் மாநில செயற் குழுவில் தஞ்சாவூருக்கு பொதுச் செயலாளர் முருகானந்தம், திருப்பரங்குன்றத்துக்கு பொதுச்செயலாளர் சரவண பெருமாள், அரவக்குறிச்சிக்கு சிவசாமி ஆகியோர் தேர்தல்பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.