சர்வகட்சி கூட்டமா? திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டமா?

காவிரிவிவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்தகூட்டத்தில் பாஜக கலந்து கொள்ள வில்லை. இந்நிலையில் இந்த கூட்டம் ஒரு நாடகம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியிருந்தார்.

இதனையடுத்து அனைத்துகட்சி கூட்டம் முடிந்தபின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடந்தது சர்வகட்சி கூட்டமா? திமுக கூட்டணிக் கட்சிகள் அல்லது அந்தக் கூட்டணியில் சேரத்துடிப்பவர்களைத் தவிர யாரும் பங்கேற்கவில்லையே. எனவே இந்தக்கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தபலன் கிடைக்கப் போவதில்லை.
 
காங்கிரஸும், திமுகவும் கடந்த 40 வருடமாக பொறுப்பில் இருந்திருக்கிறது. காவிரிப்பிரச்னையில் என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதை பட்டவர்த் தனமாக தமிழக மக்களுக்குத் தெரிவியுங்கள். அதனால் தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியிருக்கிறேன்.
 
பழையதைமறந்து, இப்போதாவது எல்லா கட்சிகளும் ஒருங்கிணையலாமே என்கிறார்கள். முதலில், இதுவரை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அதன்பிறகு யோசிப்போம். இத்தனை ஆண்டு காலம் நடந்த சீரழிவுக்கு யார்காரணமோ அந்தக் காங்கிரஸை அருகில் வைத்திருக்கிறார். இதுவரை நடந்த தவறுகளுக்கும் துரோகங் களுக்கும் காங்கிரஸ் துணையாக இருந்தது. இப்போதும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
 
கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தவர். 12 மத்தியமந்திரிகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை கண்டுகொள்ள வில்லை. மீண்டும், இப்போது அவர்களை நம்பி போலியான நம்பிக்கையை தமிழகமக்களுக்குக் கொடுக்க வேண்டுமா? அதற்கு எல்லாக்கட்சிகளும் துணைபோக வேண்டுமா? அரசாங்கம் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியிருந்தால் எல்லோரும் கலந்துகொண்டிருப்பார்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருப்பார்கள் என பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...