இந்தியாவின் கடைசி கிராமத்தில் இந்திய பிரதமர் –

இன்று நாமெல்லாம் நம்முடைய குடும்பத்துடன் சந்தோசமாக தீபாவளி கொண்டாடி வருகிறோம். ஆனால் நம்முடைய ராணுவ வீரர்கள் தங்களின் சுக துக்கங்களை கண்டு கொள்ளாமல் இந்த தேசமே கோயில் இதை பாதுகாப்பதே தங்களின் கடவுளுக்கு செய்யும் சேவை என்று வாழ்ந்து வருகிறார்கள்.

எத்தனையோ தொலைவில் இருந்துக்கொண்டு இந்தியா வின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை தங்க ளி ன் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லையே என்று ஏக்கத்துடன் இருக்கும் நம்முடைய ராணுவ வீரர்களுடன் இந்த நாட்டையே தன்னுடைய குடும்பமாக கருதி வாழ்ந்துவரும் நம்முடைய பிரதமர் மோடி கைகுலுக்கி அவர்களுடன் உறவாடி உணவருந்தி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

பிரதமரான பிறகு தனது முதல் தீபாவளியை 19000 அடி உயரத்தில் உள்ள உலகின் உயர்ந்த போர்க்களமான சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய மோடி, கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள இந்தியாவின் கடைசி கிராமமான மாணாவில் இந்தோ – திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் மோடி தீபாவளிக் கொண்டாடுகிறார்.

மாணா என்கிற இந்த கிராமம் தான் நம்ம இந்தியாவுடைய கடைசி கிராமம். இதன் முழுப்பெயர் மணி பத்ரபுரி என்பதாகும். இந்த மாணா கிராமம் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்துக்களுக்கு இது உணர்வு சம்பந்தப் பட்ட கிராமம். ஆம் இங்குள்ள ஒரு குகையில் தான் வியாசர் உரைக்க விநாயகர் பாரதத்தின் அடையாமான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களையும் மகா பாரதத்தையும் எழுதினார்.

இந்த குகை பத்ரிநாத் போகும் வழியில் இன்றும் வியாசர் குகை என்கிற பெயரில் உள்ளது. இந்த குகையின் காலம் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் எனவே உலகின் உயர்ந்த தத்துவங்கள் உதயமான இந்த மாணா கிராமத்தை இந்தியாவின் கடைசி கிராமம் அல்ல முதல் கிராமம் என்றே நாம் சொல்ல வேண்டும்.

இந்த மாணா கிராமத்தில் ஒரு டீக்கடை உள்ளது. அது தான் இந்தியாவின் கடைசி டீக்கடை என்று அந்த டீக்கடையின் ஓனர் பெருமையாக நம்முடைய தமிழில் கூட இதை எழுதி வைத்துள்ளார். இறைவன் ஆசியிருந்தால் இந்த இந்தியாவின் கடைசி…… ஸாரி முதல் கிராமமான மாணாவிற்குச் சென்று அங்குள்ள வியாசர் குகையை தரிசித்து விட்டு அப்படியே அந்த இந்தியாவின் கடைசி டீக்கடையில் என்னுடைய கடைசி டீயை குடிக்க வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசையாகும்.

இந்த கிராமம், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவாக இருந்ததில்லை. இந்தோ சீன போரின் பொழுது இந்த கிராமத்தில் உள்ள சிலரை சீன ராணுவம் பிடித்து கொன்றுள்ளது. ஆனால்
நம்முடைய மோடி அரசு வந்தவுடன் இங்கு இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையின் முழு பாதுகாப்பும் முழு நேரமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1962 அக்டோபர் 24ம் தேதி, அதாவது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை 1962 அக்டோபர் 20ம் தேதி ஆரம்பித்து நான்கு நாட்கள் கழித்தே இந்த இந்திய – திபெத் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அதாவது சண்டை வந்த பிறகே இந்த நாட்டை காக்க வேண்டும் என்று நேருவுக்கு தோன்றியுள்ளது. இதன் வேலை காஸ்மீரின் லடாக் பகுதியிலுள்ள கர கோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்திய சீன எல்லையை பாதுகாப்பதே.

இங்குள்ள எல்லைப்பகுதிகள் 9000 முதல் 18000 அடி உயரம் வரை உள்ளது. அதனால் எப்பொழுதும் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள இந்த எல்லை பகுதிகளை பாதுகாக்கும் நம்முடைய இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் அர்ப்பணிப்பு உணர்வு யாருக்கும் வராது. ஆரம்பத்தில் 4 பட்டாலியன் வீரர்களுடன் இருந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை இன்று 54 பட்டாலியன்களுடன் சுமார் 90,000 வீரர்களை கொண்டுள்ளது.

ஐநா சபையில் இருந்து இந்தியாவுக்கு போன் போட்டு இந்த சூடான் நாட்டுக்கு ஒரு அமைதிப்படையை அனுப்ப வேண்டும் எனவே உங்கள் நாட்டில் இருந்து ஒரு படைப்பிரிவை அனுப்புங்கள் என்று உதவி கேட்கப்படும் பொழுது நம்முடைய ராணுவம் ஐநாவின் அமைதிப்படைக்கு அனுப்பும் படைபிரிவு இந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு எனப்படும் ITBP( Indo-Tibetan Border Police) படையைத்தான்.

அந்தளவிற்கு இயற்கை பேரழிவுக்கால மேலாண்மை, அணு ஆயுத தாக்குதலினால் உண்டாகும் சூழ்நிலையை சமாளிக்கும் பயிற்சி மலையேறுவதில் வல்லமை பனிக்கட்டிகளில் பயணம் செய்வது என்று அனைத்தி லும் கில்லாடிகள் இந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர். இவர்களோடு சேர்ந்து இந்தியாவின் கில்லாடிகளான மோடியும் அஜித்தோவலும் இணைந்து இன்று தீபாவளிக் கொண்டாடுவது மிகச் சிறப்பானது.

நன்றி -விஜய குமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...