ராணுவ வீரர்களின் தியாகம், எனது மனதையும், இதயத்தையும் தொட்டுவிட்டது

இந்திய ராணுவ வீரர்களின் தீரத்தையும், தியாகத்தையும் பாராட்டிய பிரதமர் மோடி தீபாவளியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் அகிலஇந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாடி வருகிறார். இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளியானது, உலக பண்டிகையாகிவிட்டது. அமெரிக்க தபால் துறை, தீபாவளிக்காக தபால் தலை வெளியிட்டுள்ளது. இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் தீபாவளியைப்போல், நம்மிடையே உள்ள மூட நம்பிக்கை, எழுத்தறிவின்மை, வறுமை போன்ற சமூக தீமைகளும் அகற்றப்பட வேண்டும்.
 
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், தீபாவளி கொண்டாடவேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெற்றோர் கூடவே இருக்கவேண்டும்.  
 
சமீபத்திய சில நிகழ்வுகளின் காரணமாக, நமது ராணுவ வீரர்கள், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்துவருகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், உழைப்பும் என்னை திக்குமுக்காட செய்கிறது. அவர்களின் தியாகம், எனது மனதையும், இதயத்தையும் தொட்டுவிட்டது.
 
சில ராணுவ வீரர்கள், பாலை வனத்தில் பணியில் இருக்கிறார்கள். சிலர், இமயமலையில் காவல்காக்கிறார்கள். சிலர் தொழிற்சாலைகளிலும், சிலர் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் எண்ணற்ற துயரங்களை தாங்கிவருகிறார்கள். அவர்களின் பணியால்தான், நாம் நிம்மதியாக தீபாவளி கொண்டாடுகிறோம். பண்டிகை கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது, நாம் அவர்களை நினைவு கூர்ந்தால், அவர்களுக்கு வலிமையும், புத்துணர்வும் கிடைக்கும். 
 
எனவே, இந்த தீபாவளியை முப்படை வீரர்களுக்கு அர்ப்பணிப் போம். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லுமாறு நான்விடுத்த அழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நமது பலம். நாடுமுழுவதும் ஒற்றுமையை உருவாக்கவும், பிரிவினைவாத மனப் பான்மைனைய வீழ்த்தவும் வழிகாண வேண்டிய பொறுப்பு, அனைத்து குடிமக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...