ஒருசட்டத்தை கூறி உரிமையை பறிப்பதை ஏற்க முடியுமா?

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: தமிழகத்தில் பணத்திற்கு வாக்களிக்கும் அவமானத்திற்கு விடிவு காலம் ஏற்படும்வகையில் நடைபெற இருக்கும் 3 இடைத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இந்தமாற்றத்தை உருவாக்க வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கமாட்டோம். வாக்கிற்கு பணம் தர அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும்.

வாக்கிற்கு பணம்தருபவர்கள் 2 சட்டப்பேரவை, 2 மக்களவை தேர்தல்களில் போட்டியிடும் தகுதி அற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். அதேபோல, வாக்கிற்கு பணம் வாங்குபவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதவகையில் 3 மாத சிறை தண்டனை வழங்க வேண்டும். காவிரி பிரச்னையில் திமுக அரசு, மத்தியகாங்கிரஸ் அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறுவாணி அணை பிரச்னையில் மத்திய அரசு செயல்பட்டவிதத்தை பாராட்டாமல் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளரை பாஜ ஆதரிக்கும் முடிவு அந்தமாநில நலன்சார்ந்த விஷயம். இது பொது தேர்தல்அல்ல. அந்த மாநில சூழ்நிலை அடிப்படையில் புதுச்சேரிமாநில பாஜ இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக விவசாயம், தொழில் வளர்ச்சிக்கு உதவ மத்தியஅரசு தயாராக இருக்கிறது. அந்தநிலை வரும்போது தாழ்ந்த நிலை உயரும். மனித உரிமை, மற்ற உரிமைகள் பற்றிபேசுபவர்கள் குஷ்பு கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். கோடிக் கணக்கான பெண்களின் குமுறல் இது. ஒருசட்டத்தை கூறி உரிமையை பறிப்பதை ஏற்க முடியுமா? இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...