நாட்டின் வளர்ச்சிக்கான புதியகல்வி கொள்கையில் அரசியல் இல்லை

நாட்டின் வளர்ச்சிக்கான புதியகல்வி கொள்கையில் அரசியல் இல்லை, என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் கூறினார்.

பாரதீய ஜெயின்சங்கத்தின் 32–வது தேசியமாநாடு சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. தொடக்கவிழாவுக்கு சங்கநிறுவனர் சாந்திலால் முத்தா தலைமை தாங்கினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

நாட்டை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தரமானவளர்ச்சியை பிரதமர் எதிர் நோக்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துவருகிறார். குறிப்பாக நமது கல்விதுறையிலும் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுமையான கல்வி முறைகள் தேவைப்படுகிறது. இதனால் கல்வி துறையை மேம்படுத்துவதற்காக புதிய கல்வி கொள்கையை பிரதமர் அறிவித்து உள்ளார். இது நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டுதான் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்விகுறித்த சரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகளை சிதைப்பது புதியகல்வி கொள்கையின் நோக்கமல்ல. புதிய கல்வி கொள்கையால் மனித நேயத்தை வளர்க்கவும், மக்களிடையே ஒருமைப் பாட்டை வளர்ப்பதற்காகவும், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த புதியகல்வி கொள்கை பயன்படும். பல்வேறு மாநிலங்களில் இந்த கல்விகொள்கை குறித்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டுவருகிறது.

புதிய கல்விகொள்கையின் வரைவு பகுதியில் 10 சதவீதம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. இது நிரந்தரம்இல்லை. இதுகுறித்து சரியான புரிதல் இல்லாததால் தமிழ்நாடு மற்றும் கேரளமாநிலங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதுதேவையற்றது.

ஐ–போன் தயாரிக்க வெறும் ரூ.5 ஆயிரம் மட்மே செலவிடப் பட்டாலும், விற்பனை என்று வரும் போது அவை ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.ஆக நல்ல கண்டுப்பிடிப்புக்கு நல்லகல்வி தேவைப்படுகிறது. எனவே தான் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதியகல்வி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது.

 இது குறித்து வரும் 10–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கும் அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்திலும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. அனைவருடைய கருத்துகளையும் கேட்டு நாட்டின் நலன்கருதி இறுதிமுடிவு பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...