புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடுமுழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டண ரத்து சலுகைவரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல்காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.
தொடர்ந்தும் பணநோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல்காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 18 என அடுத்தடுத்து இரூமுறை நீட்டிக்கப்பட்டது.
இந்தசலுகை நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சில நாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்ககட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தில்லியில் இன்று மத்திய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடுமுழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.