இன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் சீராகும்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டதால், மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், இன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு சீராகும் என்று மத்திய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து டில்லியில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால், உலகில் மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடான இந்தியாவை ரொக்க பரிவர்த்தனை இல்லாத நாடாக மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால், அரசுக்கு வரிவருவாய் கிடைப்பதுடன், முறைகேடுகளும் தடுக்கப்படும்.


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக புதிய ரூபாய்நோட்டுகள் வைக்கப்பட்டு, இப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்கள் தற்போது சந்தித்துவரும் பிரச்னைகள் அனைத்தும் தாற்காலிகமானதுதான். இப்பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு, மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் துரிதகதியில் ஈடுபட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நாள்தோறும் மிகப் பெரிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு அனுப்பிவருகிறது. அடுத்த 3 வாரத்துக்குள் குறிப்பிடத்தக்கதொகை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்பிறகு, மக்களின் பிரச்னைகள் குறையத் தொடங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...