‘பீம்’ செயலி ஒரு பார்வை

சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் 'பீம்' செயலியை (Beem app) பிரதமர் மோடி அறிவித்தார். இந்த செயலி மூலம் எப்படி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்த விளக்கங்களை பார்ப்போம்.

*சட்டமேதை அம்பேத்கர் நினைவாக 'பீம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த செயலி இணையதளம் இல்லாமலேய பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

*ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிளின் IOS இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

 

*நீங்கள் ஆண்டிராய்ட் மொபைல் பயன்படுத்துவராக இருந்தால் Google Play Store-ல், 'பீம்' செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

*பின்னர், அதில் உங்கள் வங்கி கணக்கு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

*அதற்கான ரகசிய குறியீட்டை எண்ணையும் பதிவு செய்துவிட்டால் போதும். அவ்வளவுதான், அந்த நொடியில் இருந்து உங்கள் மொபைல்தான் உங்கள் வங்கியை போல் செயல்படும்.

*எப்படியென்றால், கடையில் ஒரு பொருளை வாங்கி கொண்டு, இதேபோன்று பீம் செயலி வைத்திருக்கும் வர்த்தகரின் மொபைல் எண்ணை பெற்றுகொண்டு நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடலாம்.

*இது தவிர ஆதார் எண்ணை வங்கி கணக்கோடு இணைத்து விட்டால் இன்னும் எளிதாகிவிடும்.

*வர்த்தகர்கள் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியை வாங்கி வைத்திருந்தால் உங்கள் ரேகையை பதிவு செய்து பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

*நீங்கள் வெளியே செல்லும் போது கார்டுகளோ, மொபைல் இணைய சேவையோ தேவை இல்லை. உங்கள் விரல் ரேகையே போதுமானது.

*இந்த பீம் செயலியில் முக்கிய அம்சம் என்னவென்றால் பேடிஎம் (PAYTM) போன்ற ஈ-வாலட்களை போல் முன்கூட்டியே பணத்தை வைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

*இணைய பரிவர்த்தனை போல் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலவு செய்யலாம்.

*இந்த முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ள வரம்பு உள்ளது. அதன்படி, ஒரு பரிவர்த்தனைக்கு, அதிகபட்சமாக ரூ.10,000.

*ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

*ஆண்டிராய்ட் இல்லாத சாதாரண செல்போன்களில் இருந்து *99# எண்ணை அழைத்தால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் கிடைக்கும்.

*தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த ஆப் வெளியாகியுள்ளது.விரைவில் பல்வேறு மொழிகளில் 'பீம்' செயலி வெளியாக உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...