சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் 'பீம்' செயலியை (Beem app) பிரதமர் மோடி அறிவித்தார். இந்த செயலி மூலம் எப்படி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்த விளக்கங்களை பார்ப்போம்.
*சட்டமேதை அம்பேத்கர் நினைவாக 'பீம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த செயலி இணையதளம் இல்லாமலேய பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
*ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிளின் IOS இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
*நீங்கள் ஆண்டிராய்ட் மொபைல் பயன்படுத்துவராக இருந்தால் Google Play Store-ல், 'பீம்' செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
*பின்னர், அதில் உங்கள் வங்கி கணக்கு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
*அதற்கான ரகசிய குறியீட்டை எண்ணையும் பதிவு செய்துவிட்டால் போதும். அவ்வளவுதான், அந்த நொடியில் இருந்து உங்கள் மொபைல்தான் உங்கள் வங்கியை போல் செயல்படும்.
*எப்படியென்றால், கடையில் ஒரு பொருளை வாங்கி கொண்டு, இதேபோன்று பீம் செயலி வைத்திருக்கும் வர்த்தகரின் மொபைல் எண்ணை பெற்றுகொண்டு நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடலாம்.
*இது தவிர ஆதார் எண்ணை வங்கி கணக்கோடு இணைத்து விட்டால் இன்னும் எளிதாகிவிடும்.
*வர்த்தகர்கள் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியை வாங்கி வைத்திருந்தால் உங்கள் ரேகையை பதிவு செய்து பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
*நீங்கள் வெளியே செல்லும் போது கார்டுகளோ, மொபைல் இணைய சேவையோ தேவை இல்லை. உங்கள் விரல் ரேகையே போதுமானது.
*இந்த பீம் செயலியில் முக்கிய அம்சம் என்னவென்றால் பேடிஎம் (PAYTM) போன்ற ஈ-வாலட்களை போல் முன்கூட்டியே பணத்தை வைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
*இணைய பரிவர்த்தனை போல் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலவு செய்யலாம்.
*இந்த முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ள வரம்பு உள்ளது. அதன்படி, ஒரு பரிவர்த்தனைக்கு, அதிகபட்சமாக ரூ.10,000.
*ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
*ஆண்டிராய்ட் இல்லாத சாதாரண செல்போன்களில் இருந்து *99# எண்ணை அழைத்தால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் கிடைக்கும்.
*தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த ஆப் வெளியாகியுள்ளது.விரைவில் பல்வேறு மொழிகளில் 'பீம்' செயலி வெளியாக உள்ளது.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.