எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான்

தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொங்கல்விழா நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டு பொங்கலிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குபிறகு டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்புவழங்க இயலாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்து உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தவிவகாரம் மத்திய அரசின் கைகளில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் கைகளில்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை சுப்ரீம்கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. தற்போது அவசரசட்டம் கொண்டு வந்தாலும் அதே நிலைதான் வரும். அவசரசட்டம் கொண்டு வருவதற்கான நடைமுறையும் இல்லை.

எனவேதான் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் மத்திய அரசு இந்த பிரச்சினையை கையாண்டு வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இடையே ஜல்லிக்கட்டு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழக பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக ஜல்லிக் கட்டு உறுதியாக நடைபெற வேண்டும் என்ற வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுவக்கீல் தெளிவாகவும், வலிமையாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரானது அல்ல என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், தடைபட்டு விடக்கூடாது என்பதுதான் என்பது தான் எங்கள் நோக்கம்.

முக்கிய பிரச்சினைகளில் நீதிமன்றமும் மக்கள் உணர்வு களோடு ஒன்றியிருக்க வேண்டும். ஒருமருந்தை இன்று கொடுத்தால்தான் நோயாளி காப்பாற்றப்படுவான் என்று இருக்கும்போது நாளைதான் அந்த மருந்தை கொடுப்போம் என்பதை போல்தான் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தும் இருக்கிறது.
 

 

இனியும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக் கட்டை நடத்துவது தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்றார்.

பின்னர் அவர் பா.ஜ.க. உறுப்பினர்சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை ஒருமாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...