வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம்

கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நாடு முழுவதும் கிராமப்புற வீட்டு வசதியை ஊக்குவிக்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீட்டு வசதியை ஏற்படுத்தும் வகையிலும் இத்துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிராப்புறங்களில் புதிதாக வீடுகட்டுதல் அல்லது பழையவீட்டை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.2 லட்சம்வரை பெறப்படும் வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கப்படும். அதே நேரம் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் (பிஎம்ஏஒய்-ஜி) கீழ் ஏற்கெனவே பயனடைந்தவர்களுக்கு இதுபொருந்தாது.

இந்தத்திட்டம் ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியின் (என்எச்பி) மூலம் செயல்படுத்தப்படும். வீட்டுக்கடன் பெறும் வாடிக்கையாளர் சார்பில் 3 சதவீத வட்டியை மத்திய அரசு என்.எச்.பி-க்கு செலுத்திவிடும்.

பின்னர் வாடிக்கையாளர் கடன்பெற்றுள்ள வங்கிக்கு என்எச்பி இந்தத்தொகையை அனுப்பி வைக்கும். இதனால், வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணை கணிசமாகக் குறையும்' என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...