இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும்

விவசாயிகள், ஏழைகள், தலித்மக்கள், வேளாண்மை, கிராமங்கள் ஆகியவற்றை மனதில்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்' என பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்தியபட்ஜெட் குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த பட்ஜெட் எதிர்காலத்துக்கான பட்ஜெட். விவசாயிகள், ஏழை எளியமக்களின் நலன், வெளிப்படைதன்மை, ஊரக வளர்ச்சி, நகரங்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. மிகவும் நல்ல பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும்.

கிராமங்களில் நிலவும் பொருளாதார சூழ்நிலை களில் இந்த பட்ஜெட் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நடுத்தர மக்களின் வருவாயை உயர்த்தும். ரயில்வேதுறையை நவீனப்படுத்துவது முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, கல்வி துறை முதல் சுகாதாரத்துறை வரை, தொழில்முனைவோர் முதல் தொழிற்சாலைகள் வரை என அனைத்து தரப்பு கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் தெளிவான முறையில் இந்தபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் இந்தபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை சாதனைக்குரியது. கறுப்புப்பணம் மற்றும் ஊழலை அடியோடு வேரறுக்கும் வகையிலான அம்சங்கள் இந்தபட்ஜெடில் வலுவாக எதிரொலிக்கிறது. வரிஏய்ப்புகளை குறைத்து, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான விரிவான திட்டங்கள் இந்த் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தனிநபர் வருமான வரி 5 சதவீதம் குறைக்கப் பட்டதன் மூலம் குறைவான ஊதியம்பெறும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பயன் பெறுவர். ஊழல் மிகுந்த அரசியலை தூய்மைப்படுத்தும் வகையில் இந்தபட்ஜெட்டில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் நன்கொடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுபட்ஜெட்டுடன், ரயில்வேபட்ஜெட்டும் இணைக்கப்பட்டதன் மூலம், ரயில்வே துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்" என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...