அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை. எப்பவுமே இப்படித்தான்

தமிழக அரசியல் சூழலில் எந்நேரமும் திருப்பம் ஏற்படலாம் என்கிறநிலையில் திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக பாரதிய ஜனதாவும் பன்னீர் செல்வம் முதல்வராக நீடிப்பதே முறை என்கிற நிலைப் பாட்டில் உள்ளன. ஆனால், அண்மையில் செய்தித் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ''சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதே முறை என்றும், தமிழக பாரதிய ஜனதாவும் திராவிட கட்சிகள் போன்று தான் செயல்படு வதாகவும், திராவிடக்கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமை தமிழகத்தில் கால்ஊன்றினால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்'' என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை பதிலளித்து பேசுகையில், '' 'தமிழக பாரதிய ஜனதா தனது நிலைப்பாட்டை எடுக்க உரிமைஉள்ளது' என்று மத்தியில் அமித் ஷா கூறியுள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி, இப்படிப்பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், அவரது கருத்துக்குப்பதில் கூறி எங்களது நேரத்தை வீணடிக்க போவதில்லை. மேலும் நாங்கள் காங்கிரஸ் போன்று ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் இல்லை. தமிழக பாரதிய ஜனதா, 'பன்னீர்செல்வம்தான் முதல்வராக மீண்டும் வரவேண்டும்' என்கிற தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்கு பதவி ஆசை ஏற்பட்டிருக்காவிட்டால்… இந்தநிலைமை உருவாகி இருக்காது. தமிழக மக்களின் அமைதியான வாழ்வுதான் எங்களுக்கு முக்கியம். பன்னீர்செல்வமே முதல்வராக நீடித்திருந்தால் இப்படியான சூழல் உருவாகிஇருக்காது. அதனால் தான் நாங்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிக்கிறோம். மற்றபடி தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற சதித்திட்டம் தீட்டுகிறது என்பதெல்லாம் முற்றிலும் பொய்யானவாதம். தேர்தலில் நேரடியாக மோத விரும்புபவர்கள் நாங்கள். திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் கட்சியாக தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்த்துவருகிறோம். மத்திய நிர்வாகிகளுக்கும் இது நன்றாகவேதெரியும்” என்றார்.

''அப்படியென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்கு மத்தியத்தரப்பில் ஏதேனும் புகார் தெரிவிக்கப்படுமா'' என்றதற்கு, “அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை. எப்பவுமே இப்படித்தான் என்றால், புகார்கூறி என்னதான் செய்வது” .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...