முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை என பாஜக.,வின் தேசியச்செயலர் எச். ராஜா தெரிவித்தார்.திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 20 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்வழியே, ஊடகங்கள், சசிகலா தரப்பில் ஆளுநர் காலம்தாழ்த்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நியாயமானதல்ல என்பது புரிந்திருக்கும்.
தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக உருவாக்கப்பட்ட அரசியல்குழப்பம் முடிவுக்கு வருவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. அடுத்தமுதல்வரை தேர்ந்தெடுப்பதில் அனுபவமும், போதிய சட்ட அறிவும் பெற்றுள்ள தமிழக ஆளுநர் சரியான முடிவெடுப்பார்.
சட்டப்பேரவையைக் கூட்டி யாருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் பலம்உள்ளதோ அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கவேண்டும். அதுவே வெளிப்படையான வழியாகஇருக்கும்.
முன்னதாக தமிழக முதல்வர் காவல் துறை உதவியுடன் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுவிக்கவேண்டும். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சிஅமைக்க திமுகவின் உதவியை நாடினால் அதிமுக வாக்காளர்களின் செல்வாக்கை அவர்கள் இழக்கநேரிடும். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராகவேண்டும்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்பாட்டின் பின்னணியில் பாஜக இல்லை. மாறாக, மாநிலஅரசின் வளர்ச்சியின் பின்புலத்தில் பாஜக உறுதுணையாக இருக்கும் என்றார் ராஜா.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.