திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பு

பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.

தூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள்  1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட  வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.

திரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.

–    பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...