மத்திய பெட்ரோலிய துறையால் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் எடுக்கும் விஷயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணைஅமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் சந்தித்து விவரங்களை கூறி விளக்கம் கேட்டார்.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் மிகத்தெளிவாக விளக்கங்களை எடுத்துக்கூறினார்.
என்பனபோன்று மேலும் பல விஷயங்களை மத்திய இணை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் எடுத்துக்கூறினார்கள். திரு. தர்மேந்திரா பிரதான் அவர்களிடம் பேசும் போது,குறிப்பிட்டுச்சொன்னமிக முக்கியமான சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.மேலும்,
தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அது அப்பகுதி மக்களுக்கு நல்லதா கேட்டதை என்று கூறும் தகுதி எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பின் தலைவர்களுக்கும் இல்லை. ஏனெனில், அத்திட்டம் வருவதால் உள்ள நன்மை மற்றும் தீமைகளை ஆராய்ந்து அறியும் விஞ்ஞான ரீதியான தெளிவை எந்த அரசியல் கட்சிமற்றும் அமைப்பின் தலைவரும் பெறவில்லை.
எனவே, நெடுவாசல் பகுதியில் வரும் இத்திட்டம், அப்பகுதி மக்களுக்கு நலன் தருமா இல்லையா என்பதை நன்கு தெரிந்து கொண்டு முடிவெடுப்பதே சிறப்பாக இருக்கும் என்று தான் கருதுவதாக திரு. பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்..
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.