மத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில் காலதாமதம் செய்வதில்லை

தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைதுசெய்வது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


இலங்கை கடற்படையால் சுடப்பட்டு தமிழகமீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அங்கு ஞாயிற்றுக் கிழமை சென்றமத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:


இச் சம்பவம் நடந்த 2 மணி நேரத்திலேயே பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம், இந்தியா சார்பில் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை தெரிவிக்குமாறு கூறினார். இலங்கைஅரசும், இது குறித்து விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, நரேந்திரமோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகமீனவர்கள் சுமார் 1,830 பேர் விடுவிக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில் காலதாமதம் செய்வதில்லை.


கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இருநாடுகளின் பேச்சு வார்த்தையின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்களை தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்பதும் ஒருமுக்கியமான முடிவாகும். இந்த ஒப்பந்தத்தை, தற்போது இலங்கை கடற்படை மீறியிருக்கிறது.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை கடற்படையினரை கைதுசெய்ய தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கு வந்துள்ளேன் என்றார்.
முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் தாயார் மேரி உள்பட மீனவப் பெண்களிடம் நிர்மலா சீதாராமனும், பொன். ராதாகிருஷ்ணனும் பேசி சமாதானம் செய்தனர்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...