மோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ள வில்லை-

மோடியிடம் உள்ள குணம் என்ன வென்றால் ஒரு விஷயம் சரி என்று அவருக்கு தோன்றிவிட்டால் அதைஎப்பாடுபட்டாவது தீர்க்க முனைவார்.அதே நேர த்தில் அது தவறு என்று நினைக்க ஆரம்பித்து விட்டா ல் அதைகடைசி வரை கண்டு கொள்ளவே மாட்டார். இதற்கு உதாரணம் விவசாயிகள் போர்வையில் டெல் லியில் நடந்துவரும் போராட்டத்தை மோடி கண்டு கொள்ளாததில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

சரி மோடி ஏன் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை என்று பார்ப்போம்..

 

2011 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட 2011 ம் ஆண்டு பட்ஜெட்டில் இலவசங் களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 8,900 கோடி ரூபாய். அதுபடி படியாக உயர்ந்து சென்ற வருடம் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு  அதி மு க அரசால் தாக்கப்பட்ட 2016-17பட்ஜெட்டில் இலவ சங்க ளுக்கும் மானியங்களுக்கும் தமிழக அரசால் ஒதுக்கப்ப ட்ட தொகை .72,615 கோடி ரூபாய் ஆகும். 

 

2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழக அரசு  மாநில அரசின்  வரி வருமானம் ரூ.99,590 கோடி என்று கூறியிருந்தது. அதேநேரத்தில் இலவசங்கள், மானிய ங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் மட்டும் ரூ.72,615 கோடி என்று பெருமிதமாக பன்னீர் செல்வம் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் டை வாசித்தார் .

 

அதாவது அரசின் சொந்த வரி வருவாயில் 73% இலவ ச த்தி ற் காகவும்,மானியங்களுக்காகவும் மட்டும் செலவிடப்படுகிறது. இந்த செலவிலிருந்து தமிழக த்திற்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்கப் போவதில் லை , இலவசங்களுக்கு  மட்டும் 73% தொகையை தன்னுடைய வருமானத் தில் செலவு செய்யும் ஒரு முட்டாள் அரசு உலகிலேயே வேறு எங்கும் கிடையா து.

 

இந்த 72 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக மக்கள் அரசுக் கு அளித்த வரிப்பணம்.ஆனால் அந்த பணத்தை தன் னு டைய ஓட்டு அரசியலுக்காக வீணாக்கி விட்டது தமிழக அரசு.. உண்மையிலேயே தமிழக விவசாயி கள் மீது  தமிழக அரசு அக்கறை வைத்திருந்தால் இல வ சங்களை நிறுத்தி விட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம்.விவசாயிகளின் பிரச்ச னைகளை தீர்க்க ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம்.

 

காவிரியின் கடைக்கோடியில் மழைக்காலங்களில் வேஸ்டாக வங்கக்கடலில் கலக்கும் 60 டிஎம்சி தண்ணீ ரை தடுத்து தேக்கி வைத்து அதன் மூலம் விவசாய வளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழி செய்து இருக் கலாம்.கடல்நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சனை க்கு நிரந்தர தீர்வு காண முனைந்திருக்கலாம்.

 

இன்னும் பத்து வருசத்தில் தமிழகம்பாலைவனமாகும் என்று நீர் வள வல்லுனர்கள் கதறிக்கொண்டு இருக் கும் பொழுது இலவசங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி வீசும் கோமாளி அரசை உலகில் வேறு எங்கும் பார்த்து உள்ளீர்களா..

 

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் தரவில்லை என் று இன்னும் எத்தனைக்காலம் ஒப்பாரி வைத்துக் கொ ண்டு இருக்க போகிறீர்கள். ஆறுகள் இல்லாத நாட்டி லும் விவசாயம் செய்கிறார்கள்.தெரியுமா?ஐக்கிய அரபு அமீ ரகம் என்கிற பாலைவன தேசத்தில் ஆறுக ளும் கிடை யாது ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.

 

கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தி தான் இங்கு விவசாயம் செய்கிறார்கள்.இதை தான் மக்கள் குடிக்கிறார்கள் .மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழ ற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும், பூங்கா க்க ளு க்கும் பாய்ச்சப்படுகிறது.அதோடு காய்கறிக ளும் விளைவிக்கிறார்கள்.கோதுமை பயிர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

 

இன்றைக்கும் உலக வல்லரசுகளில் ஒன்றான இஸ்ரே லுக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்.ஒட்டு மொத்த நாட்டின் நீர்வளம் நம்ம தமிழ்நாட்டின் நீர் வளத்தை விட நூறில் ஒரு பங்கு தான் இருக்கும்.ஆனால் அங்கு நமக்கு புத்தி சொல்லும் அளவிற்கு விவசாயம் செழி த்து வருகிறது .இதற்கு காரணம்.சொட்டு நீர் பாசனம் .இதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் பாதியா க குறைவதோடு உற்பத்தியும் இரண்டு மடங் காக இருக்கும்

 

இதைப்பற்றி கேள்விப்பட்ட கர்நாடக அரசு இஸ்ரேல் நீர் வள நிபுணர்களுடன் ஆலோசனை செய்து தங்கள் மாநி ல விவசாய நிலங்களில் செயல்படுத்தி வருகிற து. விவசாயிகளின் குறைகளை தீர்த்து வைப்பது மாநில அரசின் முதல் கடமை.அதைவிட்டுவிட்டு இலவசங்களுக்கு பட்ஜெட் போடுவது அல்ல.

 

இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஆறறிவை கழற்றி வைத்துவிட்டு  இலவசங்களுக்கு மயங்கி  கிடக்கும் தமிழகம் மத்திய அரசை குறைகூறி மோடி யை எதிர்த்து போராடுவதன் மூலம் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...