நேற்று பல்வேறு நாளிதழ்களில் ரயில்வே துறையில் உணவு பண்டங்கள் வாங்குவதில் மிக பெரிய ஊழல் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. 100 கிராம் தயிர் ரூபாய் 972க்கும், 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூபாய் 1241க்கும், 1 பாக்கெட் டாட்டா உப்பு ருபாய் 49க்கும் வாங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவருக்கு ரயில்வே துறையிலிருந்து எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர் கட்சிகளும் இந்த ஊழல் குறித்து தங்களின் கண்டனங்களை வெளியிட்டதோடு, இதனால் தான் ரயில்வே
துறை நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல்வேறு அறிக்கைகளை கொடுத்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைத்து நிற்கவில்லை. தகவல் கொடுக்கப்பட்டது தவறு என்றும், 100கிராம் தயிர் உள்ள 108 தயிர் கோப்பைகள் ரூபாய் உள்ளடக்கிய அட்டை பெட்டி ரூபாய் 970 க்கு, அதாவது 100 கிராம் 8 ரூபாய் தொண்ணூறு காசுக்கும், 15 லிட்டர் சமையல் எண்ணெய் டின், ரூபாய் 1241க்கும், அதாவது 1 லிட்டர் 82 ரூபாய், 70 காசுக்கும் வாங்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி எழுத்து பூர்வமாக தவறான தகவலை அளித்த நபர்களை இடைநீக்கம் செய்துள்ளதோடு மேலும் சிலர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது ரயில்வே அமைச்சகம்.
பாஜகவின் மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட எதிர்க்கட்சிகள் துடிக்கலாம். ஆனால் சில ஊடகங்கள் பெரிய ஊழல் நடந்தது போன்ற ஒரு மாயையை எதிர்க்கட்சிகள் செய்ய முனையும் நேரத்தில் நாட்டின் நலன் கருதி உண்மை நிலையை ஆராய்ந்து செய்திகளை வெளியிட வேண்டியது அவைகளின் தார்மீக கடமை. வதந்திகளை பரப்பி விட்டு அதன் மூலம் குளிர்காயலாம் என்ற திட்டத்தோடு பாஜக அரசின் மீது புழுதி வாரி தூற்ற நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது. நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசை மேலும் மேலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்பது உறுதி.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.