மன்மோகன் சிங்கின் ” லூட்” என்பதன் உண்மையான அர்த்தத்தை அவர்களுக்கே விரைவில் உணர்த்துவார்கள்

நோக்கம் தெளிவானதாக இருந்தால் முடிவும் தெளிவாகத்தான் இருக்கும் – நமது பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தீடீரென்று அறிவித்தபொழுது இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பா.ஜ.க-வைத் தவிர அத்துனை எதிர்கட்சிகளும் ஒரனியில் திரண்டு நமது மோடியை எதிர்த்தன.

ஒரு படி மேலே போய் நமது தமிழக ஊடகங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செல்லாக்காசு விவகாரம் என்று நாமகரணம் சூட்டி தங்கள் பங்கிற்கு தேச சேவை செய்தன.ஆனால், இன்று, மூன்று மாதங்கள் இடைவிடாமல் குரைத்த அத்துனை ஜந்துக்களும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கின்றன

இந்த நடவடிக்கை துவங்கிய பொழுது உரக்கக் கத்தியாவது இதை தடுத்துவிடலாம் என்று அத்துனை திருடர்களும் ஒன்று சேர்ந்து முயன்றும் கூட மோடியின் முன் ஒன்றும் பலிக்காததால் அந்த விவகாரத்தையே விட்டுவிட்டன என்று கூறலாம்.

பாராளுமன்றத்திலேயே இதை "லூட்" என்று கூறிய முன்னாள் பிரதமர் தனது டர்பனுக்குள் ஒழிந்து கொண்டு இருக்கிறார் -தாம்தூம் என்று குதித்த பப்புவும் மம்மியும் பம்மிக் கிடப்பதன் ரகசியம் என்ன? ப.சி- என்ற குள்ள நரி இப்பொழுது ஏன் ஊழையிடவில்லை ?

 

அதாவது, கினற்றை தோண்டும்போது பூதம் வந்தது என்பது ஒரு பழமொழி -ஆனால், நமது தலைவர் மோடி ஜி- பூதத்தை வெளியே கொண்டுவரத்தான் கிணற்றையே தோன்டினார் என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும் ?

 

மார்ச் 31-ம் தேதியுடன் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளும் கால அவகாசம் முடிந்தும் இன்னும் எந்த விதமான கணக்கு வழக்குகளும் மத்திய அரசு வெளியிடவில்லை ஆனால், அதை கேட்க வேண்டிய எவனும் இன்னும் கேட்கவில்லை ஏன்?

 

ஏனென்றால், நான் கூறப்போகும் தகவல் 100% உண்மையானது – உண்மையான தேசப்பற்றுள்ள எவரின் இதயத்தையும் ஒரு வினாடி திகைக்க வைக்கக் கூடிய உண்மை. நான் முழுவதும் புள்ளி விபரங்களுடன் செய்யும் பதிவு இது.

 

கடந்த _நவம்பர் 8ம் தேதி மோடி அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது இது கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர எடுக்கப்படும் முயற்சி என்றார் -நாம் அனைவரும் கணக்கில் காட்ட முடியாத கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று நினைத்தோம் -எப்படியும் மொத்த பண மதிப்பில் ஒரு 4 லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு வராது ஒழிந்து விடும் என்று நினைத்தோம் –

ஆனால், நடந்தது என்ன ?

 

நவம்பர் – 8 வரை நமது நாட்டில் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்களின் மதிப்பு 15:44 லட்சம் கோடி -இதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 31.12.2016 வரை வங்கிகளில் மாற்றிய பணத்தின் மதிப்பு 14.92 லட்சம் கோடி  இதில் ஏற்கனவே வங்கிகளில் இருப்பில் இருந்த (Cash Reserve Ratio) CRR – 4.06 லட்சம் கோடி –

 

இந்த கணக்கின்படி -14.92 +4.06=18.96 லட்சம் கோடிகள் 500, 1000 ரூபாய்களாக வங்கிகளுக்கு வந்து விட்டன,ஆனால் நாம் Print செய்த ரூபாய்கள் (500, 1000 மட்டும்) 15.44 லட்சம் கோடிகள் மட்டுமே -ஆக, நாம் print செய்ததை விட 3.52 லட்சம் கோடிகள் அதிகமாக நமது வங்கிகளுக்குள் வந்து இருக்கின்றன -இது – 31.12.2016 வரை உள்ள கணக்கு -இன்னும் 31.03.2017 வரையிலான கணக்குகள் வர வேண்டியதிருக்கின்றன -அவை என் கணிப்பின்படி எப்படியும் இன்னும் ஒரு 4 லட்சம் கோடிகளை அசால்டாகத் தாண்டும் –

இதனுடன் கொசுறாக அணைத்து வங்கிகளின் சுழற்சி பணம் 70,000 கோடி அதில் 50,000 கோடி 500, 1000 ரூபாய்கள் (CRRவேறு)ஆக, கிட்டத்தட்ட 8 லட்சம் கோடிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இத்துனை காலம் நம் புழக்கத்தில் இருந்துள்ளன -இவை என்ன கள்ள நோட்டுக்களா?

 

கிடையவே கிடையாது எத்துனை திறமையாக கள்ள நோட்டு அச்சடித்தாலும் அதில் அத்துனை பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுவர முடியாது -அப்படியானால், இது இந்திய அரசாங்கத்தை வழி நடத்திய கயவர்களின் வழிகாட்டுதலின்படிReserve வங்கியால் அவர்களது சொந்த உபயோகத்திற்காக அச்சடிக்கப்பட்ட காகிதம் –

 

வங்கிகளுக்கு வந்த அத்துனை காகிதங்களின் சீரியல் எண்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன-விரைவில் இந்தக் கயவர்களின் முகத்திரைகளை மோடி ஜி கிழித்து எறிவார் என்று நம்புவோம் அன்று இவர்கள் ஓடி ஒளிய முடியாது –

 

பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் பயன்படுத்திய " லூட்" என்பதன் உண்மையான அர்த்தத்தை அவர்களுக்கே விரைவில் உணர்த்துவார்கள்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...