நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில், இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம், அவை குறித்து பரிசீலிக்கப் படும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தவிவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவபிரச்சினை இல்லை. எந்தவொரு சமுதாயத்தையோ, உணவு பழக்கவழக்கத்தையோ, இறைச்சி தொழிலையோ குறிவைத்து அரசாணை வெளியிடப்பட வில்லை. இந்த விதிகளால் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்ற ஹர்ஷ் வர்தன், இந்த விவகாரம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம். அவற்றைபரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.