சுதந்திரம் அடைந்தபிறகு பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தம் ஜி.எஸ்.டி

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக. அலுவலகமான கமலாலயத்தில் மத்திய நிதித் துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்  அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் பாஜக. அரசு 3 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முதன் முதலாக ரெயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல்செய்தது பா.ஜ.க. அரசுதான்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தம் என்பது ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) ஆகும்.

ஜி.எஸ்.டி. வரி குறித்து தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு விளக்கங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. அதன் மூலம் ஜிஎஸ்டி. வரி குறித்த சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

இதற்கு மேலும் ஜிஎஸ்டி. வரி குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள்மூலம் விளக்கம் அளிப்பார்கள். மத்திய மந்திரிகளும் மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்களை தீர்த்துவைப்பார்கள்.

மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி. வரிக்கான விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை தேர்வுசெய்வது தொடர்பாக மூன்று மூத்தமந்திரிகள் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு தேர்வு செய்யும் வேட்பாளரை கட்சியின் தலைவர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...