இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருக்கும், ஜி.எஸ்.டி. துவக்க விழாவில், காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்டு பங்கேற்பது சந்தேகம்.

“அவசர, அவசரமாக செயல்படுத்துவதால், வணிகர்கள் துன்புறுத்தப்படலாம், திட்டம் தோல்வியுறலாம், பொருளாதாரம் பாதிக்கப்படலாம்”, என ஏகப்பட்ட “லாம்”கள், இம்முடிவின் பின்னணியில் இருப்பதாக செய்திகள் உலவுகின்றன.

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

.
.ஜி.எஸ்.டி.யை ஏப்ரல், 2016ல் அமல்படுத்த திட்டமிட்டார், மோடிஜி. ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி இல்லை எனும் காரணம் உட்பட பல்வேறு தடைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. செயல்படத் துடிக்கும், மோடிஜியின் பார்வையில், ஜூலை, 2017 என்பது, 15 மாத கால தாமதம். ஆனால், செயல்பட அச்சப்படும் சிக்யூலர்கள் பார்வையில், ஜூலை, 2017 என்பது, அவசர அவசரம்.

.

செயல்படுவோருக்கும், பயப்படுவோருக்கும் இதுதான் வித்தியாசம். தேசத்தின் வளர்ச்சி, 15 மாத காலம் தாமதித்து விட்டது என தேசபக்தன் துடிக்கிறான். “இன்னும் கொஞ்சம் தாமதமாகட்டுமே”, என்று ஒரு சாரார் அலட்சியம் காட்டுகிறார்கள்.

100% சரி செய்தபிறகு, ஒரு திட்டம் செயல்படவேண்டுமானால், 0+0=0 என்ற கணக்கை மட்டும்தான் அனைவரும் செயல்படுத்த முடியும். " சும்மா உட்கார்ந்திருப்பதென முடிவெடுத்தால் கூட, 100% சும்மா உட்கார்ந்திருக்க முடியாது ", எனும் வடிவேலு காமெடி காட்சிதான், சிக்யூலர்களை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

ஜி.எஸ்.டி கவர்னிங் கவுன்சில், ஏக மனதாக முடிவெடுத்த பிறகே, ஜி.எஸ்.டி.யின் பல அம்சங்கள் அமல்படுத்தப்படுகிறது. சட்டங்கள், மத்தியில் மட்டுமல்ல, மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து கட்சியினரும், இதில் இடம் பெற்றுள்ளனர்.

“ஏக மனது” எனும் கருத்துருவாக்கத்தினால்தான், சில குறைகள் காணப்படுகின்றன.
அவையும், காலப்போக்கில் நீக்கப்படும்.“விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து” – பொய்யாமொழி. போர் புரிந்துகொண்டிருக்கும் நாளே பிறந்தநாள் என்றும், போர்புரியாது கழிந்த நாள் பிறவா நாள் என்றும் கருதுகின்றவனே சிறந்த வீரன்.

.

பொய்யாமொழியின் இலக்கணப்படி, தேசபக்தன் மோடிஜி சிறந்த வீரன். விழுப்புண்படத் தயங்காத வீராதி வீரன். ஜூலை 1 முதல், துவங்கவிருக்கும், தாக்குதல்களை எதிர்கொள்ள, வீரனுக்கு துணை நிற்போம். தாக்குதல்களில் பல, கருப்பு பண முதலைகளின் பினாமி தாக்குதல்களாகவும் இருக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.