வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன்

அஸ்ஸாமில் பெய்துவரும் கன மழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி, அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலை பேசியில் தொடர்புகொண்டு, தற்போதைய சூழல் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மத்திய அரசு அஸ்ஸாமுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் பாப்பம்பேரே மாவட்டத்தில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  ஐந்துபேர் பலியாகினர். ஒன்பது பேரை காணவில்லை. அஸ்ஸாமில் கனமழைக்கு ஆறு பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாமின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் தத்தளித்தமக்கள், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வடகிழக்கு மாநிலங்களில் நிலவிவரும் சூழல் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “வட கிழக்கு மாநில மக்களுக்கு உறுதுணையாக இந்தியா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...