இந்த தமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.
இரண்டே உதாரணங்கள் போதும்…
முதலாவது, ஏன் GST வரியை எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் GST ஐ எதிக்கவில்லை , வரியை குறைக்கத்தான் சொல்கிறேன் என்றார் கமல். இவ்வளவுதான் டிக்கெட் விலை வைக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம் , ஏன் Capping வைக்கிறது என்று கேட்கிறார்.
அதற்கு பாண்டே , சினிமா லக்ஸுரிதானே அதற்கு அதிக வரி விதித்தால் என்ன தவறு, ? பொது மக்கள் பார்க்கும் சினிமா அவர்களுக்கு நியாயமான செலவாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறார்…
அதற்கு கமலின் பதில் : டிக்கெட் விலை அதிகம்னு நெனச்சா படம் பார்க்காதீங்க, விட்ற வேண்டியதுதானே…
நம் கேள்வி : சினிமாவுக்கு போடும் வரியை அரசாங்கம் குறைக்கலைன்னா நீ படம் எடுக்கிறதை விட்ற வேண்டியதுதானே ? டிக்கெட் விலையும் சரி, அதற்கான வரியும் சரி , பாக்கெட்டிலிருந்து கொடுக்கப் போகிறவன் ரசிகன்.. உன் இஷ்டத்திற்கு நிர்ணயிக்கும் கட்டணமே தப்பில்லை என்றால் அதற்கு விதிக்கும் வரியில் மட்டும் என்ன தப்பு ? கட்டணம் பெரிசா, வரி பெரிசா ? அதிக கட்டணத்ததைக் கொடுப்பவன் அதற்கான வரியை மட்டும் கொடுக்க மாட்டேன்னு சொன்னானா ?
இரண்டாவது உதாரணம் : பாண்டேயின் கேள்வி :
இந்த அதிமுக அரசாங்கம் போக வேண்டும் என்கிறீர்கள். இந்தக் கட்சி 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள், அதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறீர்களா ?
பதில் : ஆமாம்.
பாண்டே கேள்வி : அதிமுகவிற்கு மாற்று திமுக என்று நினைக்கிறீர்களா, இந்த அரசாங்கம் ஊழல் என்றால் அதை திமுக மாற்றும் என்று நினைக்கிறீர்களா ?
கமல் : அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை. நாம் இருக்க வைக்க வேண்டும்.
நம் கேள்வி : திமுகவை நேர்மையாக இருக்க வைக்க முடியும் என்றால் அதிமுகவையும் இருக்க வைக்க முடியுமே ! அதற்கு ஏன் இடையில் ஆட்சி மாற வேண்டும் ?
மக்களே , ரஜினிக்கு அதிமுக மீது கோபம் வந்தது தன் வாகனம் போயஸ் தோட்டத்தில் வழி மறிக்கப்பட்டதால்….
கமலுக்கு கோபம் வந்தது , தன் படத்திற்கு ஜெயலலிதா கொடுத்த தொந்திரவுகளால்…
இவங்களுக்கு மக்கள் பிரச்சினைகள் கடைசி பட்சம். அப்படி மக்கள் பிரச்சனைகளும் ஊழலும்தான் இவர்கள் கோபத்திற்கு அடிப்படை காரணம் என்றால் , இந்தியாவில் இருப்பதிலேயே ஆகப்பெரிய கொள்ளைக்காரர் கருணாநிதி அடித்த கொள்ளைகளுக்கும், இந்திய தேசத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த துரோகங்களுக்கும் …ஏன் , கடந்த திமுக ஆட்சியில் திரையுலகையே ஆட்டிப்படைத்த கருணாநிதி குடும்பத்தின் அட்டூழியங்களுக்கும் , அதிமுக மேல் ஏற்பட்ட கோபத்தை விட பல்லாயிரம் மடங்கல்லவா கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்..
ஆனால் இந்த இருவரும் கருணாநிதி ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் தேசம் முழுக்க சோனியாவின் காங்கிரஸோடு சேர்ந்து சுரண்டிக் கொழுத்தபோது , கட்டுமரத்திற்கு நடந்த பாராட்டு விழாக்களில் புகழாரம் சூட்டி ஜால்ராதானே போட்டாங்ய…?
ஒரே ஒரு வார்த்தை கண்டிச்சிருப்பாங்யளா ரெண்டு பேரும் ? ஏன் கண்டிக்கவில்லை ?
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.