தமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள்

இந்த தமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

இரண்டே உதாரணங்கள் போதும்…

முதலாவது, ஏன் GST வரியை எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் GST ஐ எதிக்கவில்லை , வரியை குறைக்கத்தான் சொல்கிறேன் என்றார் கமல். இவ்வளவுதான் டிக்கெட் விலை வைக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம் , ஏன் Capping வைக்கிறது என்று கேட்கிறார்.

அதற்கு பாண்டே , சினிமா லக்ஸுரிதானே அதற்கு அதிக வரி விதித்தால் என்ன தவறு, ? பொது மக்கள் பார்க்கும் சினிமா அவர்களுக்கு நியாயமான செலவாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறார்…

அதற்கு கமலின் பதில் : டிக்கெட் விலை அதிகம்னு நெனச்சா படம் பார்க்காதீங்க, விட்ற வேண்டியதுதானே…

நம் கேள்வி : சினிமாவுக்கு போடும் வரியை அரசாங்கம் குறைக்கலைன்னா நீ படம் எடுக்கிறதை விட்ற வேண்டியதுதானே ? டிக்கெட் விலையும் சரி, அதற்கான வரியும் சரி , பாக்கெட்டிலிருந்து கொடுக்கப் போகிறவன் ரசிகன்.. உன் இஷ்டத்திற்கு நிர்ணயிக்கும் கட்டணமே தப்பில்லை என்றால் அதற்கு விதிக்கும் வரியில் மட்டும் என்ன தப்பு ? கட்டணம் பெரிசா, வரி பெரிசா ? அதிக கட்டணத்ததைக் கொடுப்பவன் அதற்கான வரியை மட்டும் கொடுக்க மாட்டேன்னு சொன்னானா ?

இரண்டாவது உதாரணம் : பாண்டேயின் கேள்வி :
இந்த அதிமுக அரசாங்கம் போக வேண்டும் என்கிறீர்கள். இந்தக் கட்சி 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள், அதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறீர்களா ?

பதில் : ஆமாம்.

பாண்டே கேள்வி : அதிமுகவிற்கு மாற்று திமுக என்று நினைக்கிறீர்களா, இந்த அரசாங்கம் ஊழல் என்றால் அதை திமுக மாற்றும் என்று நினைக்கிறீர்களா ?

கமல் : அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை. நாம் இருக்க வைக்க வேண்டும்.

நம் கேள்வி : திமுகவை நேர்மையாக இருக்க வைக்க முடியும் என்றால் அதிமுகவையும் இருக்க வைக்க முடியுமே ! அதற்கு ஏன் இடையில் ஆட்சி மாற வேண்டும் ?

 

மக்களே , ரஜினிக்கு அதிமுக மீது கோபம் வந்தது தன் வாகனம் போயஸ் தோட்டத்தில் வழி மறிக்கப்பட்டதால்….

கமலுக்கு கோபம் வந்தது , தன் படத்திற்கு ஜெயலலிதா கொடுத்த தொந்திரவுகளால்…

இவங்களுக்கு மக்கள் பிரச்சினைகள் கடைசி பட்சம். அப்படி மக்கள் பிரச்சனைகளும் ஊழலும்தான் இவர்கள் கோபத்திற்கு அடிப்படை காரணம் என்றால் , இந்தியாவில் இருப்பதிலேயே ஆகப்பெரிய கொள்ளைக்காரர் கருணாநிதி அடித்த கொள்ளைகளுக்கும், இந்திய தேசத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த துரோகங்களுக்கும் …ஏன் , கடந்த திமுக ஆட்சியில் திரையுலகையே ஆட்டிப்படைத்த கருணாநிதி குடும்பத்தின் அட்டூழியங்களுக்கும் , அதிமுக மேல் ஏற்பட்ட கோபத்தை விட பல்லாயிரம் மடங்கல்லவா கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்..

ஆனால் இந்த இருவரும் கருணாநிதி ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் தேசம் முழுக்க சோனியாவின் காங்கிரஸோடு சேர்ந்து சுரண்டிக் கொழுத்தபோது , கட்டுமரத்திற்கு நடந்த பாராட்டு விழாக்களில் புகழாரம் சூட்டி ஜால்ராதானே போட்டாங்ய…?

ஒரே ஒரு வார்த்தை கண்டிச்சிருப்பாங்யளா ரெண்டு பேரும் ? ஏன் கண்டிக்கவில்லை ?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...