எடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைபிடிக்கும்

மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைபிடிக்கும் என அக்கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா பெங்களூருவில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷா நேற்று காலை பெங்களூருவந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பிரமாண்டவரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கவுடா, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:

பாஜகவை பலப்படுத் துவதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்காக வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவளர்ச்சி பெறவில்லை. ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பாஜக தொண்டர்கள் ஒரு நிமிடம்கூட ஓயக்கூடாது.

எடியூரப்பா தலைமையில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைபிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பயணத்தில் விரைவில் கர்நாடகாவும் இணையும். அதுவரை பாஜக தலைவர்கள் ஓயாமல்செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்த அமித் ஷா புதிதாக அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்துவைத்தார். மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான இணையதள பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுடன் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்சி மோதலை விட்டு, அனைவரும் கட்சி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிகிறது.

மாலை 6 மணிக்கு தனியார் விடுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடினார். அப்போது பாஜக ஆட்சிஅமைப்பதற்கு தேவையான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளை வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, பல்வேறு மடாதிபதிகளையும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி வகுப்புகளின் தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...