குழப்பம் நீடித்தால் சட்ட சபையை முடக்க வாய்ப்பு

மாநில அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகும்போது, சிலசமயம் சட்டசபையை சஸ்பெண்ட்செய்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதுண்டு.

ஆட்சி கவிழ்க்கப் பட்டு உடனடி தேர்தல் வருவதைத்தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சூழல் சீரானபிறகு சட்டசபை சஸ்பெண்ட் நீக்கப்பட்டு மீண்டும் ஆட்சிதொடர வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நடந்துவரும் செயல்கள், ஆட்சி கவிழ்ப்பை நோக்கிசெல்வதால் மத்திய அரசு இதில் தலையிட்டு சட்ட சபையை முடக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 21 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந் துள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த போது 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் வரை கலந்து கொள்ளவில்லை.

அவர்கள் டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர்செல்’ ஆட்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது நிலையை தெளிவுப்படுத்திகொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க தொடங்கியுள்ளார். டி.டி.வி. தினகரனுக்கு பதிலடிகொடுப்பதற்காக இதன் மூலம் அவர் தன்னை தயார் படுத்தி வருகிறார்.

குறிப்பாக தினகரனின் 19 எம்எல்ஏ.க்களால், மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக சர்ச்சை எழுந்து இருப்பதால் அதற்கு முடிவுகட்ட எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மற்றும் டி.டி.வி.தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்றுதெரிகிறது. அப்போது தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்படும்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டால் தி.மு.க. கூட்டணியின் 98 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமாசெய்து பதிலடி கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலை எழும்பட்சத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும்பட்சத்தில் தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டால் சட்டசபையை சிறிது நாட்களுக்கு முடக்கிவைக்க வாய்ப்புண்டு .

இத்தகைய சம்பவம் சிலமாநிலங்களில் ஏற்கனவே நடந்துள்ளது. 1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி உத்தரவிட்டதை ஏற்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் முதல்வர்பதவியில் இருந்து விலக மறுத்தார்.

இதனால் கர்நாடகா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது மத்தியஅரசு தலையிட்டு சட்டசபையை ஒரு வாரத்துக்கு முடக்கிவைத்தது. கடந்த ஆண்டு கூட அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபை செயல்பாடு சில தினங்களுக்கு முடக்கிவைக்கப்பட்டது.

அருணாசல பிரதேசத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சட்ட சபை சில வாரங்களுக்கு செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 1½ மாதம் சட்ட சபை முடக்கத்தில் இருந்தது.

தமிழ்நாட்டில் இதற்குமுன்பு 1976, 1980, 1988 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகி ஆட்சிகள்கவிழ்ந்தது. அந்த 4 தடவையும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டது. அப்போது சட்டசபை கலைக்கப்பட்டது.

ஆனால் இந்ததடவை சட்ட சபையை கலைக்காமல் சஸ்பெண்ட் மட்டும்செய்து சிலநாட்கள் முடக்கி வைத்து விட்டு, மீண்டும் சட்டசபைக்கு உயிர்கொடுக்கும் திட்டத்துடன் உள்ளனர். இந்ததிட்டப்படி சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டால், தமிழக அரசியல் வரலாற்றில் இது தான் சட்டசபையின் முதல் சஸ்பெண்ட் நடவடிக்கையாக இருக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...